மண் பானை தண்ணீரின் மகத்துவங்கள்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

By Asianet TamilFirst Published Mar 18, 2023, 5:28 PM IST
Highlights

கோடையில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் குளிர்ந்த நீரை விட மண் பானை தண்ணீர் ஆரோக்கியமானதாகும். உண்மையில், இந்த நீர் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.
 

சுட்டெரிக்கும் கோடை வந்துவிட்டது. இந்த சீசனில் நம் உடலில் உள்ள அனைத்து நீரும் வியர்வையாக வெளியேறிவிடும். இதனால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த நீரிழப்பு சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தானதாக மாறுகிறது. அதன்காரணமாகவே இந்த பருவத்தில் திரவ உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த கோடைக் காலங்களில் பலரும் குளிர்ந்த நீருக்கு பதிலாக குளிரூட்டப்பட்ட தண்ணீரை பருக அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால் ஃப்ரிட்ஜில் குளிரூட்டப்பட்ட நீரை பருகுவது உடல் ஆரோக்கியத்துக்கு அவ்வளவு நல்லது கிடையாது. குளிரூட்டப்பட்ட நீர் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. மேலும் பல உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்ந்த நீரை குடித்தால் தொண்டையில் எரிச்சல் ஏற்படும். அதுதவிர செரிமானமும் மெதுவாக நடக்கும். அதனால்தான் கோடையில் ஃப்ரிட்ஜ் தண்ணீருக்குப் பதிலாக மண் பானை தண்ணீரை குடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். அதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

இயற்கையாக கிடைக்கும் குளிர்ச்சி பண்புகள்

களிமண் பானையில் இருந்து தண்ணீர் குடிப்பதன் முக்கிய நன்மைகளில் ஒன்று, இயற்கையான முறையில் கிடைக்கக்கூடிய குளிர்ச்சியான பண்புகளாகும். களிமண் ஒரு நுண்ணிய பொருள். இது காற்று மற்றும் ஈரப்பதத்தை அதன் வழியாக செல்ல அனுமதிக்கிறது. களிமண்ணின் இந்த இயற்கையான பண்பு மண் பானையை ஒரு சிறந்த இன்சுலேட்டராக செயல்பட தூண்டுகிறது. மண் பானையில் தண்ணீரைச் சேமிக்கும் போது.. அந்தத் துவாரங்கள் வழியாக காற்று மெதுவாகப் பாய்கிறது. இதன்மூலம் இயற்கையாகவே தண்ணீர் குளிர்ச்சியான நிலையை அடையும். 

பி.எச் சமநிலை ஏற்படுகிறது

தண்ணீரின் பி.எச் அளவு நமது ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. பிளாஸ்டிக் கொள்கலன்கள் அல்லது பாட்டில்களில் சேமிக்கப்படும் நீரின் பி.எச் அளவு பாட்டில்களிலுள்ள ரசாயனங்கள் காரணமாக மாறுபடுகிறது. இருப்பினும், களிமண்ணின் காரத் தன்மை, களிமண் பானையில் தண்ணீர் சேமிக்கப்படும்போது நீரின் பி.எச் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

தண்ணீருக்கு சுவை கூடும்

மண் பானையில் தண்ணீர் குடிப்பதால் தண்ணீரின் சுவை அதிகரிக்கும். ஒரு மண் பானையில் தண்ணீர் சேமிக்கப்படும் போது அது களிமண்ணில் இருந்து தாதுக்கள் மற்றும் உப்புகளை உறிஞ்சுகிறது. இது தண்ணீரின் சுவையை அதிகரிக்கிறது. களிமண் பானைகள் தண்ணீரை சுவையாகவும் நல்ல மணமாகவும் வைத்திருக்கும்.

இயற்கையான வடிகட்டி

களிமண் ஒரு இயற்கை வடிகட்டி. இது நீரிலிருந்து அசுத்தங்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் நச்சுகளை உறிஞ்சும் திறன் கொண்டது. ஒரு மண் பானையில் தண்ணீர் சேமிக்கப்படும் போது அது களிமண்ணின் சிறிய துளைகள் வழியாக செல்கிறது. இது இயற்கையாகவே வடிகட்டப்படுகிறது. அதன்மூலம் தண்ணீரிலிருந்து அசுத்தங்கள் மற்றும் நச்சுக்கள் நீங்குகின்றன.

தொண்டை வலியை உடனடியாக போக்க உதவும் 5 உணவுகள்..!!

அத்தியாவசிய கனிமங்களை வழங்குகிறது

மண் பானைகளில் கால்சியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. ஒரு மண் பானையில் தண்ணீர் சேமிக்கப்படும் போது அது இந்த தாதுக்களை உறிஞ்சிவிடும். இது நம் உடலுக்குத் தேவையான சத்துக்களை வழங்குகிறது. இந்த நீர் மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்கிறது.
 

click me!