Chandra Graha 2022 Today: இன்று பவுர்ணமியுடன் கூடிய சந்திர கிரகணம் நிகழ்வதால், குறிப்பட்ட சில ராசிகளுக்கு மட்டும் விசேஷ பலன் உண்டு. இன்றைய 12 ராசிகளின் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
பஞ்சாங்கத்தின் படி, இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 16 ம் தேதி 2022 அன்று விருச்சிக ராசியில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி, காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நீடிக்கும். இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது. ஆனால், தென் அமெரிக்கா, பசிபிக் அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிகா போன்ற நாடுகளில் இந்த கிரகணத்தை பார்க்க முடியும்.
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 2022:
அதேபோன்று, இரண்டாவது சந்திர கிரகணம் நவம்பர் 8 அன்று நடைபெற உள்ளது. இந்த கிரகணம் மாலை 05:28 மணிக்கு துவங்கி காலை 07:26 மணி வரை நீடிக்கும். இந்த கிரகணம் இந்தியாவின் சில பகுதிகளில் தெரியும்.
இதன் தாக்கம் அசுப பலன்களை கொடுக்கும். இருப்பினும், பவுர்ணமியுடன் கூடிய சந்திர கிரகணத்திற்கு சில ராசிகளுக்கு விசேஷ பலன் உண்டு. எனவே, ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த கிரகணம் 5 ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.
மேஷம்:
இன்று நிகழும் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம், உங்களுக்கு அனுகூலமான பலன்களைத் தரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள் லாபம் பெறலாம். உங்களுக்கு திடீர் பண வரவு உண்டாகும். உங்களுக்கு வேலையில் வெற்றி கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நிகழும் சந்திர கிரகணம் சுபமானதாகும். இருப்பினும், இந்த காலத்தில் இவர்கள் பொறுமையை கடைபிடிப்பது அவசியம். இந்த நேரத்தில் உங்களுக்கு பெரிய வெற்றிகள் தேடி வரும். பணியிடத்தில் அதிக மரியாதை கிடைக்கும். நிண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும்.
மிதுனம்:
இன்று நிகழும் சந்திர கிரகணம், மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இனிமையான பலன்களை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. மற்றவர்களிடம் தேவையற்ற பேச்சு வார்த்தைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.
கடகம்:
கடக ராசிக்கு இன்று நிகழும் சந்திர கிரகணம், அதிஷ்ட்டம் தரும். சந்திர கிரகணத்தால் கடக ராசிக்காரர்களுக்கு வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவுமுறைகள் மேம்படும். உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து பணிகளிலும் வெற்றி காண்பீர்கள்.
சிம்மம்:
இன்று நிகழும் சந்திர கிரகணம் சிம்ம ராசிக்காரர்களுக்கும் நன்மையாக இருக்கும். உங்களுக்கு நற்செய்திகள் வந்து சேரும். பண வரவு அதிகமாகும். நிதி நிலை மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு மே மாதத்தில் ஏற்படும் கிரகங்களின் ராசி மாற்றம், இந்த நாள் நீங்கள் எதிர்பாராத திடீர் மாற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்குலாபம் கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் சந்திர கிரகணம், இனிய பலன்கள் கிடைக்க கூடிய நல்ல நாளாக இருக்கும். எடுத்த முடிவில் இருந்து உறுதியாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார உயர்வும் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் சந்திர கிரகணம், எடுத்த முடிவுகளில் உறுதியாக செயல்படுவீர்கள். உங்கள் உடனிருப்பவர்களே உங்களுக்கு சாதகமாக செயல்பட கூடும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு நல்ல பலன் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் சந்திர கிரகணம், உங்களுக்கு புது பொலிவு தென்படும். எதிலும், இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படும். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் கூடும். பெற்றோர்களின் உதவி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகளை தள்ளிப் போடுவது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் சந்திர கிரகணம், உங்களுக்கு பிடித்த விஷயங்கள் நடைபெறும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் நடக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
கும்பம்:
கும்பம் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும், சந்திரகிரகணம் கும்ப ராசிக்காரர்களுக்கு சுபகாலத்தை அளிக்கும்.அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காணலாம். நீண்ட நாள் எதிர்பார்த்த புதிய பணிகளை மேற்கொள்வீர்கள். இருப்பினும், இந்த நேரத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நிகழும் சந்திர கிரகணம், உங்களுக்கு மகிழும் படியான நல்ல நிகழ்வுகள் நடக்க இருக்கிறது. வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். புதிய யுத்திகளை கையாளுவது சிறப்பாகும். திருமண யோகம் கைகூடும்.