Horoscope: ஏப்ரல் 29ம் தேதி கும்ப ராசியில் சனி பெயர்ச்சி...இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்...!

By Anu KanFirst Published Apr 21, 2022, 6:30 AM IST
Highlights

Horoscope: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி கும்ப ராசிக்கு வருவதால் 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்கள் கை கொடுக்கும்

30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி கும்ப ராசிக்கு வருவதால் 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்கள் கை கொடுக்கும்.

ஏழரை நாட்டு சனி:

Latest Videos

ஏழரை நாட்டு சனி காலம் என்றாலே எல்லோருக்கும் ஒரு வித பய உணர்வு இருக்கும். இப்போது தனுசு, மகரம், கும்பம் ராசிக்கு ஏழரை சனி நடைபெறுகிறது. அதன் பிறகு இன்னும் சில மாதங்களில் தனுசு ராசிக்கு ஏழரை சனி முடிகிறது மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலம் தொடங்குகிறது. இருப்பினும், இது ஒரு சிலருக்கு சிறப்பாக இருக்கும். யார் யாருக்கு என்னென்னெ பலன் என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம். 

மேஷம்: 

மேஷ ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். அலுவலகத்தில் பாராட்டுக்கள் குவியும். புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும். வேலையில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். பண வரவு உண்டாகும். பணியிடத்தில் உங்களுக்கு நல்ல பெயர்கிடைக்கும்  கிடைக்கும்.  சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் தரக்கூடிய அமோக வெற்றி கிடைக்கும். அத்துடன் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழும்.

ரிஷபம்: 

சனியின் வக்ர பெயர்ச்சியானது ரிஷப ராசிக்காரர்களுக்கு  நன்மையாக இருக்கும். உழைப்புக்கு ஏற்ற உரிய பலன் கிடைக்கும். அதிர்ஷ்டம் அமையும். தொழிலில் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வாழ்வில் முன்னேற்றம் காணப்படும். இந்த காலத்தில் நீங்கள் எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும். 

சிம்மம்: 

இந்த சனி பெயர்ச்சி மிகவும் சிறப்பானதாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற முழு பலன்கள் கிடைக்கும்.அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களுக்கு தேடி வரும். உங்களின் கடின உழைப்பு அங்கீகரிக்கப்படும்.  பணியிடத்தில் உயர்வு தருவதான அற்புத பலன்கள் தொடர்ந்து கிடைக்கும்.

கன்னி: 

கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி சாதகமான பலன்கள் தருவதாக இருக்கும். குறிப்பாக போட்டித் தேர்வுகளில் வெற்றியும் நிச்சயம் கிடைக்கும். உங்களின் நிதி நிலைமை மேம்படும். திடீர் பண வரவு, பண ஆதாயம் கிடைக்கும். இதுவரை எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும். 

மேலும் படிக்க....Horoscope: குருவுடன், சுக்கிரன் கூட்டணி...இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் இனி ராஜயோகம் பிறக்கும்..!


 

click me!