தாசில்தார் கொலை எதிரொலி..! கடும் பயத்தில் மற்றொரு தாசில்தார் என்ன செய்கிறார் பாருங்கள்...! இனி லஞ்சம்..?

By ezhil mozhiFirst Published Nov 7, 2019, 1:47 PM IST
Highlights

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ரங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்லாபுர்மேட் என்ற இடத்தில் விஜயா ரெட்டி என்ற பெண் தாசில்தார் லஞ்சம்  கேட்டதால், கோபமடைந்த  விவசாயி அவரை அலுவலகத்திலேயே தீ வைத்து கொளுத்திவிட்டார் 

தாசில்தார் கொலை எதிரொலி..! கடும் பயத்தில் மற்றொரு தாசில்தார் என்ன செய்கிறார்  பாருங்கள்...! இனி லஞ்சம்..? 

லஞ்சம் கேட்டதால் பெண் தாசில்தார் ஒருவரை அலுவலகத்திலேயே தீ வைத்து எரித்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிறகு மற்றொரு பெண் தாசில்தார் பாதுகாப்பு கருதி ஒரு குறிப்பிட்ட இடைவெளியில்  நின்று மனு கொடுக்கும் வகையில் கயிறு கட்டி உள்ள சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது. 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ரங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்லாபுர்மேட் என்ற இடத்தில் விஜயா ரெட்டி என்ற பெண் தாசில்தார் லஞ்சம்  கேட்டதால், கோபமடைந்த  விவசாயி அவரை அலுவலகத்திலேயே தீ வைத்து கொளுத்திவிட்டார் 

இந்த சம்பவத்திற்கு புறகு லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் சற்று அச்சத்தில் உள்ளனர். இந்த ஒரு நிலையில் ஆந்திர மாநிலம் கர்னூலில் உள்ள தாசில்தாரான உமா மகேஸ்வரியை சந்திக்க வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நின்று மனு கொடுக்கும் வகையில் கயிறு கட்டி விடப்பட்டுள்ளது.

அதன் படி, அந்த கயிற்றின் பின்புறமாக இருந்து தான் தாசில்தாரிடம் பேச முடியும். மனு  கொடுக்க வேண்டும் என்றாலும் கூட ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நின்றபடி தான் மனு கொடுக்க முடியும். இது குறித்து உமா மகேஸ்வரி தெரிவிக்கும் போது, விஜயா ரெட்டி மரணம் எங்களுக்கு ஒரு வித பயத்தை கொடுத்து உள்ளது. பாதுகாப்பு கருதி கயிறு கட்டப்பட்டு உள்ளது  என தெரிவித்து உள்ளார். இதற்கு சமூக வலைத்தளத்தில் பல்வேறு தரப்பிலிருந்து பல   விமர்சனங்கள் தொடர்ந்து வருகிறது. 

click me!