சரசரவென உயர்ந்த தங்கம் விலை..! வேதனை தெரிவிக்கும் மக்கள்..!

By ezhil mozhiFirst Published Nov 7, 2019, 12:10 PM IST
Highlights

இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 31 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சரசரவென உயர்ந்த தங்கம் விலை..! வேதனை தெரிவிக்கும் மக்கள்..! 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சற்று உயர்ந்தும் சில  நேரங்களில் சற்று குறைந்தும்   காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று  ஒரே நாளில் கிராமுக்கு 18 ரூபாய் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்த சவரன் விலை தற்போது 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. 

இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 31 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.18 உயர்ந்து 3676.00 ரூபாயாகவும், சவரனுக்கு 144 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 408 ரூபாய்க்கும் விற்பனையாகிறது 

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 30 பைசா குறைந்து வெள்ளி 49.40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

click me!