12 மணி நேர தொடர் அறுவை சிகிச்சை..! 12 வயது சிறுவனை காப்பாற்றிய Gleneagles குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை..!

thenmozhi g   | Asianet News
Published : Feb 24, 2020, 07:14 PM IST
12 மணி நேர தொடர் அறுவை சிகிச்சை..! 12 வயது சிறுவனை காப்பாற்றிய Gleneagles குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை..!

சுருக்கம்

சென்னையின் க்ளெனீகல்ஸ்( Gleneagles) குளோபல் ஹெல்த் சிட்டியில் சிறுவனை அழைத்து சென்ற போது, கழுத்து மற்றும் மார்பு குழியின் இடது பக்கமாக கட்டி விரிவடைந்து இருந்ததால்  சிறுவனின் நிலை மிகவும் மோசமாக இருந்தது.

12 மணி நேர தொடர் அறுவை சிகிச்சை..! 12 வயது சிறுவனை காப்பாற்றிய Gleneagles குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை..! 

கடந்த பிப்ரவரி 20  ஆம் தேதி, பங்களாதேஷைச் சேர்ந்த 12 வயது  சிறுவனின் கழுத்தில் முழுப் பகுதியையும் உள்ளடக்கிய 15X15X20 செ.மீ அளவைக் கொண்ட மாபெரும் நரம்பு கட்டியைக் கண்டறியப்பட்டு அதனை வெற்றிகரமாக நீக்கி உள்ளது  Gleneagles குளோபல் மருத்துவமனை

சென்னையின் க்ளெனீகல்ஸ்( Gleneagles) குளோபல் ஹெல்த் சிட்டியில் சிறுவனை அழைத்து சென்ற போது, கழுத்து மற்றும் மார்பு குழியின் இடது பக்கமாக கட்டி விரிவடைந்து இருந்ததால்  சிறுவனின் நிலை மிகவும் மோசமாக இருந்தது.

கழுத்தின் இடப்பக்கம் முதுகெலும்பை நோக்கி பின்னோக்கி கட்டி வளர்ந்து உள்ளது. வீக்கமாகவும் இருந்துள்ளது. இதனால் நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவரிடம் காண்பிக்கப்பட்டது. 

அந்த சிறுவனை முழு பரிசோதனை  செய்ததில், அவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் வலியால் இருந்துள்ளார். கழுத்தின் கீழ் உள்ள எலும்புகளை முற்றிலுமாக கட்டி பரவி பாதித்து உள்ளது  மற்றும் கழுத்தின் இடது பக்கத்தில் உள்ள பெரிய இரத்த நாளங்கள் இந்த பெரிய கட்டியால் மூடப்பட்டு இருந்துள்ளது. பின்னர் உரிய சோதனை செய்ததில்,அவருக்கு கழுத்து நரம்பு பகுதியில் பெரிய நரம்பு கட்டி இருந்ததை உறுதி செய்யப்பட்டு  உள்ளது 

டாக்டர் நைகல் சிம்ஸ் (மூத்த ஆலோசகர் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்) மற்றும் டாக்டர் பானிகிரன் எஸ் (மூத்த ஆலோசகர் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்), டாக்டர் ராஜ்குமார் (மூத்த ஆலோசகர் வாஸ்குலர் சர்ஜன்), டாக்டர் ஜெகந்நாத் பி.எம் (நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள்), டாக்டர் அருள். கே (நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள்) தலைமையிலான பல  மருத்துவர்கள் குழு ) மற்றும் டாக்டர் ரமணா (நியூரோ-அனஸ்தெடிஸ்ட் & நியூரோ-கிரிட்டிகல் கேர்)  அடங்கிய மருத்துவ குழு இந்த பெரிய கட்டியை ஒரே கட்ட அறுவை சிகிச்சையில் அகற்ற முடிவு செய்தனர்.

க்ளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் மூத்த ஆலோசகர் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நைகல் சிம்ஸ் கூறுகையில், “ஒற்றை-நிலை (single-stage surgery) அறுவை சிகிச்சையின் நன்மை என்னவென்றால், குறைந்த அளவு இரத்த இழப்பு, தொற்றுநோய்க்கான வாய்ப்புகள் குறைவு. குறுகிய மருத்துவமனையில் தங்குவது. இந்த வகையான கட்டிகள்  மெதுவாக வளரும்; ஆரம்பத்தில் கண்டறியப்படாவிட்டால், கடுமையான நரம்பியல் பற்றாக்குறையையும் முதுகெலும்பின் உறுதியற்ற தன்மையையும் ஏற்படுத்தக்கூடும். இது ஒரு சவாலான அறுவை சிகிச்சை முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

கட்டியின் நுண்ணிய அறுவை சிகிச்சை ஒரு நுண்ணோக்கி மற்றும் CUSA ஐப் பயன்படுத்தி செய்யப்பட்டது. இந்த கட்டியைச் சுற்றியுள்ள நரம்புகளை மிகவும் கவனமாக கையாண்டு தொடர்ந்து 12 மணிநேர " ஒற்றை-நிலை அறுவை சிகிச்சையில்" நுணுக்கமாக பார்க்கப்பட்டது

க்ளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் வாஸ்குலர் சர்ஜன் மூத்த ஆலோசகர், டாக்டர் ராஜ்குமார் கூறுகையில், “இந்த அறுவை சிகிச்சை மிகவும் சவாலானது, அறுவை சிகிச்சையின் போது இரத்த நாளங்கள் அல்லது நரம்புகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அது சிறுவனுக்கு பெரும் பக்கவாதம் அல்லது பக்கவாதம் ஏற்படக்கூடும்.”

கட்டி முழுவதுமாக அகற்றப்பட்டு, பாதிக்கப்பட்ட கழுத்துப்பகுதியில் டைட்டானியம் பிளேட் பொருத்தப்பட்டு உள்ளது. அவர் நன்றாக குணமடைந்து தற்போது பிசியோதெரபிக்கு உட்பட்டு வருகிறார். நாளுக்கு நாள்  உடல் நலம் தேறி வருகிறது என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்
குளிர்காலத்தில் 'ஆஸ்துமா' நோயாளிகளுக்கு ஆகாத உணவுகள்!!