ஆண், பெண்களுக்கு சூப்பர் ஐடியா..! இப்படி ஆவி பிடித்தால் முகப்பரு இரண்டே நாளில் மறைந்து விடும்...
பொதுவாகவே ஆவி பிடிப்பதால் பல நன்மைகள் உண்டு...
அதிலும் குறிப்பாக சளி பிடித்தாலோ அல்லது ஜலதோசம் உள்ளிட்ட சமயத்தில் ஆவி பிடிப்பது நல்லது. ஆனாலும் ஆவி பிடிப்பதை எப்போதுமே மேற்கொண்டு வந்தால் அதனால் ஏற்படும் பயன்கள் ஏராளம்.
5 நிமிடம்
ஆவி பிடிக்கும் போது ஐந்து நிமிடம் நல்ல சூடான நீரில் வரும் ஆவியில் நம் முகம் முழுவதும் படுமாறு வைத்துகொண்டு, ஆவி வெளியேறாமல் இருக்க ஒரு போர்வையை போர்த்திக்கொள்ள வேண்டும்
இவ்வாறு நான்கு முதல் ஐந்து நிமிடம் ஆவியை பிடித்த பிறகு, அரை மணி நேரம் கழித்து முகத்தை ஐஸ் கட்டியால் தேய்த்தால் பருக்கள் உடைத்து விடும்.
பருக்கள் வரவே வராது...காரணம் அதிக எண்ணெய் பசை மற்றும் சில காரணங்களால் பருக்கள் வந்தாலும், ஆவி பிடிக்கும் போது சருமம் தூய்மையாக இருக்கும்.
சருமத்தில் உள்ள அழுக்கு முற்றிலும் வெளியேறும்.
மேலும் சருமத்தில் உள்ள துளைகள் விரிவடைந்து அதில் உள்ள அழுக்குகள் கிருமிகள் விரைவில் வெளியேறி என்றும் இளமையாக இருக்க ஆவி பிடிப்பது மிகவும் நல்லது.
இதுவரை ஆவி பிடிக்கும் போது, ஆவி பிடித்து விட்டு அப்படியே விட்டு விடுவார்கள். ஆனால் இது போன்று ஆவி பிடித்து முடிந்த உடன், அரை மணி நேரம் பொருத்து ஐஸ் கட்டியை வைத்து முகத்தில் தேய்த்து எடுத்து பாருங்கள்.
பலன்கள் உங்களுக்கு தெரியும்...