
மக்கள் மத்தியில் பல்வேறு வகையான மூடநம்பிக்கைகள் இருந்து வருகின்றன. பூனை குறுக்கே சென்றால் நல்லது அல்ல, ஏணிக்கு அடியில் நடந்து செல்வது நல்லதல்ல இப்படி ஏராளமான மூட நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் நிலவி வரும் நிலையில் அதன் உண்மை தன்மை பற்றி விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
வெள்ளிக்கிழமை 13ம் தேதி துரதிர்ஷ்டவசமான நாளா?
வெளிநாடுகளில் வெள்ளிக்கிழமை 13 ஆம் தேதி என்பது மிகவும் திகிலான தேதியாக பார்க்கப்படுகிறது. பல பேய் படங்கள் அந்த தேதியில் தான் வெளியாகுமாம். இதனால் பலர் வெள்ளிக்கிழமை 13 ஆம் தேதி என்றாலே பயம் கொள்வர். மேலும் வெள்ளிக்கிழமை 13 ஆம் தேதியை மிகவும் துரதிர்ஷ்டவசமான நாளாக நினைக்கின்றனர். இந்தப் 13 கெட்ட எண் என்பது 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை என கூறப்படுகிறது. அதாவது இயேசுவின் 13 ஆம் சீடரான யூதாஸ் என்பவரே இயேசுவைக் காட்டிக் கொடுத்தார் அவர் இயேசு கடைசியாக உணவருந்தும் போது 13 ஆவது நபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை மனதில் வைத்து சிலர் 13 ராசி ஏற்ற என் எனக் கிளப்பிவிட இன்றும் அளவும் அதைப் பலபேர் நம்புகின்றனர்.
உள்ளங்கை அரித்தால் யோகமா?
உள்ளங்கை அரித்தால் யோகம் என கூறுவர். இது ஷேக்ஸ்பியர் எழுதிய ஜூலியஸ் சீசர் எனும் நூலிலிருந்து உருவானதாக கூறப்படுகிறது. உள்ளங்கை அரித்தால் நீங்கள் புது நபரைப் பார்க்கப் போகிறீர்கள் என்று ஒரு சிலர் கூறுவர். வலது கை அரித்தால் பணம் வரும் என்று கூறுவர். இடது கை அரித்தால் பணம் செலவழியும் என்பர். இது போன்று பல பேர் பல விதமாக உள்ளங்கை அரிப்பு பற்றி மூடநம்பிக்கைகளைப் பரப்பியுள்ளனர். அது இன்றளவும் உண்மையா என நிரூபிக்கப்படவில்லை என்பதே உண்மை. ஆனாலும் இன்றுவரை இதை மக்கள் நம்பி வருகின்றனர்.
ஏணிக்கு அடியில் சென்றால் கெட்டதா?
இங்கு குறிப்பிடப்படுவது முக்கோண வடிவிலான இருபக்க ஏணி. இதற்கு அடியில் சென்றால் கெட்டது நடக்கும் எனப் பல பேர் நம்பி வருகின்றனர். ஏணிக்கு அடியில் சென்றால் அது மடங்கி கீழே விழும் என்பதனால் சொன்னாள் பரவாயில்லை. ஆனால் இருபக்க ஏணி முக்கோண வடிவில் உள்ளதால் அது தீய சக்தியைக் குறிக்கும் ஒரு வடிவமாகப் பார்க்கப்படுகிறது. முக்கோண வடிவில் சாத்தான்கள் போன்ற தீய சக்திகள் இருக்கும் எனப் பலரும் நம்புவதால் முக்கோண வடிவில் இருக்கும் இருபக்க ஏணிக்கு அடியில் செல்லும் போது, அங்கு இருக்கும் தீய சக்திகளை நாம் எழுப்பி விட்டு விடுவோம் என்றும் அதனால் நமக்குக் கெடுதல் நேரும் என்றும் நம்புகின்றனர்.
கண்ணாடி உடைந்தால் கெட்டதா?
கண்ணாடி உடைந்தால் அது அபசகுனம் என்பர். அதுவும் சிலர் கண்ணாடி உடைந்தால் 7 வருடம் நமக்குக் கெட்டது நடக்கும் எனவும் அதன் பின்னர்தான் அது சரியாகும் என்றும் கூறுகின்றனர். ஏழு வருடம் என்பது நம் உடலில் உள்ள செல்கள் புதிதாக முழுமையாக மாறும் காலம் ஆகும். கண்ணாடி உடைந்தால் நமக்குக் கெடுதல் என அவர்கள் கூறும் காரணம் என்னவென்றால் கண்ணாடியில் நமது உருவம் தெரியும் எனவும் அது சுக்கு நூறாக உடையும் பொழுது, நமது ஆன்மாவுக்கு அது கேடு விளைவிக்கும் என்றும் கூறுகின்றனர். மேலும் கண்ணாடி தவறி உடைந்து விட்டால் அதிலிருந்து அதில் நடக்கும் தீயதிலிருந்து விடுபட, உடைந்த கண்ணாடியை இரவு நேரம் நிலா வெளிச்சத்தில் குழிதோண்டிப் புதைத்து விடுமாறு கூறுகின்றனர். அப்படிச் செய்தால் தோஷம் விலகும் என்று நம்புகின்றனர்.
குதிரை லாடம் நல்லதா?
ஒரு சில நாடுகளில் குதிரை லாடம் கண்டால், அதைக் கண்டவருக்கு மிகவும் நல்லது என்பர். குதிரை லாடம் யு வடிவிலானது, அந்த யூ வடிவு பலரும் ஒரு நல்ல வடிவாகக் கருதுகின்றனர். எத்தனை லாடம் கிடைக்கின்றதோ அத்தனை வருடம் அவருக்கு நல்லது நடக்கும் எனவும் பலர் இன்றளவும் நம்புகின்றனர். குதிரை லாடம் கிடைத்தால் அதில் ஒரு முனையில் துப்பிவிட்டு நமது இடது தோளில் வைத்துக்கொண்டு, அது எங்குக் கிடைத்ததோ அங்கே விட்டுவிட்டால் மிகவும் நல்லது என்று கூறுகின்றனர். அதை நம் வீட்டு வாசலில் திறந்தவெளியில் தொங்க விட்டால் நமக்கு நல்லது நடக்கும் எனவும் நம்புகின்றனர்.
வீட்டிற்குள் குடை பிடித்தால் ஆபத்தா?
வீட்டுக்குள் குடை பிடித்தால் கெட்டது என்று சிலர் கூறுவர். இதில் என்ன என தோனலாம். வீட்டிற்குள் இருக்கும் பொழுது அருகில் இருக்கும் யார் கண்ணிலும் பட்டு விடாமல் இருப்பதற்காக இது பரப்பப்பட்ட ஒரு வதந்தி என நினைத்தாலும் ஒரு சிலர் வீட்டிற்குள் குடை பிடித்தால் குடை பிடிப்பவர்கள் இறந்து விடுவார்கள் என எண்ணுகின்றனர். ஏனென்றால் குடை, வெயிலில் சூரியனிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கும். அதே குடையை வீட்டிற்குள்ளும் நாம் பிடித்தால், சூரியக் கடவுளை நாம் அவமானம் செய்துவிட்டதாகக் கருதி நமக்குத் தண்டனை கிடைக்கும் என நம்புகின்றனர்.
கதவை இரண்டு தடவை தட்டினால் கெட்டதா?
இந்த மூடநம்பிக்கை சில காலங்களுக்கு முன் மரங்களைத் தெய்வமாக வணங்கிய போது ஆரம்பித்ததாகச் சொல்லப்படுகிறது. அப்பொழுது தமக்கு வேண்டியவற்றைக் கடவுளிடம் அதாவது மர கடவுளிடம் கேட்குமுன், ஒரு முறை தட்டிவிட்டுக் கேட்பார்களாம், பின்பு அந்தக் காரியம் நடந்து விட்டால் கடவுளுக்கு நன்றி சொல்வதற்காக மீண்டும் தட்டுவார்கள். எனவே நாம் இருமுறை தட்டினாள் நமக்கு நான் கேட்டது கிடைத்து விட்டது என்று கடவுள் ஏதும் செய்ய மாட்டாராம். இந்த மூட நம்பிக்கையும் பலர் இன்னும் பின்பற்றி வருகின்றனர்.
தோளில் உப்பு விழுந்தால் நல்லதா?
உப்பு மிகவும் முக்கியமான ஒரு பொருளாக இருந்து வருகிறது. தீய சக்திகளை விரட்டும் பல பூஜைகளில் உப்பைப் பயன்படுத்துவது வழக்கம். அந்த உப்பு நமது தோளில் சிந்தினால், நல்லது நடக்கும் எனவும் தீயசக்திகளிடமிருந்து அது நம்மைப் பாதுகாக்கும் எனவும் நம்புகின்றனர்.
கருப்பு பூனை கடந்துபோனால் கெட்டதா?
சில வருடங்களுக்கு முன் கருப்பு பூனை என்பது ஒரு கெட்ட சகுனமாகப் பார்க்கப்பட்டது. கருப்பு பூனை ஏழு வருடங்களில் ஒரு அமானுஷ்ய சக்தியாக மாறும் எனப் பலரும் நம்பி உள்ளனர். பல நாடுகளை ஆக்கிரமித்த சக்திவாய்ந்த மனிதர்களான ஹிட்லர், நெப்போலியன் போன்றவர்களும் கருப்பு பூனையைக் கண்டு பயம் கொண்டுள்ளனர்.
தும்பினால் நல்ல விஷயம் நடக்குமா?
ரோம் போன்ற சில நாடுகளில் தும்மினால் நல்ல விஷயம் நடக்கும் என நம்புகின்றனர். 1665 ஆம் ஆண்டு மக்கள் பலரும் கொடிய பிளேக் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளனர். அப்பொழுது பலர் தும்மல் போட்டு உள்ளனர், தும்புவது நோய் முற்றி இறக்கும் நேரத்தை கூறுவதாக நம்பிய அவர்கள், பிளேக் நோயால் அவதிப் படுவதை விட இறப்பதே மேல் என்று தும்பி நிம்மதியாக இறந்துவிட்டனர். எனவே தும்மல் போடும் போது காட் பிளஸ் யூ என்று சொல்வதை அந்நாடுகளில் அப்பொழுது பலர் வழக்கமாக வைத்துள்ளனர். இது போல இன்னும் பல மூடநம்பிக்கைகள் இன்றும் இருந்து வருகிறது. சிலர் ஏன் என்பது கூட தெரியாமல் பிறர் சொல்லிவிட்டு போனதை இன்றளவும் நம்பி பின்பற்றி வருகின்றனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.