மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டி துன்புறுத்தல்..! பள்ளி தாளாளரின் செய்த அதிர்ச்சி காட்சி..!

Published : Nov 21, 2019, 06:28 PM IST
மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டி துன்புறுத்தல்..! பள்ளி தாளாளரின் செய்த அதிர்ச்சி காட்சி..!

சுருக்கம்

கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ளது புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி. இன்று திடீரென இந்த பள்ளியின் முன் மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டி துன்புறுத்தல்..! பள்ளி தாளாளரின் செய்த அதிர்ச்சி காட்சி..! 

பள்ளி தாளாளர் ஒருவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளிடம் ஆபாச வீடியோவை காட்டி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ளது புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி. இன்று திடீரென இந்த பள்ளியின் முன் மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த போலீசார் எதற்காக இந்த முற்றுகைப் போராட்டம் என விசாரித்தனர்.

அப்போது தெரிய வந்த விஷயம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதாவது இந்த பள்ளியின் தாளாளர் மரிய அண்டனி ராஜ் என்பவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் தான் வைத்துள்ள மொபைல் போனில் ஆபாச வீடியோக்களை ஓட விட்டு அதனை மாணவர்களிடம் காண்பித்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். பின்னர் பள்ளி தாளாளர் ஆண்டனிராஜிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்