நாயை அழைத்து செல்லும் டெலிவரிமேன்... நெகிழ வைக்கும் ஸ்விகி ஊழியர்..!

By vinoth kumarFirst Published Nov 21, 2019, 6:05 PM IST
Highlights

வளர்ப்பு பிராணிகளில் எப்போதுமே நாய்க்கு தனி இடமுண்டு. நாய் நன்றியுள்ள ஒரு மிருகம். மனிதர்கள் பலரிடம் காணக்கிடைக்காத இக்குணத்தை நாயிடம் காணலாம். அதற்கு மற்றொரு உதாரணமாக இன்று சென்னையில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. 

வளர்ப்பு பிராணிகளில் எப்போதுமே நாய்க்கு தனி இடமுண்டு. நாய் நன்றியுள்ள ஒரு மிருகம். மனிதர்கள் பலரிடம் காணக்கிடைக்காத இக்குணத்தை நாயிடம் காணலாம். அதற்கு மற்றொரு உதாரணமாக இன்று சென்னையில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. 

பிரபல ஆன்லைன் புட் டெலிவரி நிறுவனமான ஸ்விகியில் டெலிவரி மேனாக ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் வீட்டில் நன்றியுள்ள பிராணியான நாயை வளர்த்து வருகிறார். ஆனால், நாய்க்கு உரிய நேரத்தில் உணவு அளிக்கவும், அவற்றை அன்பாக கவனித்து கொள்ளவும் ஆட்கள் இல்லை. 

ஆகையால், தினமும் வேலைக்கு செல்லும் போது தன்னுடன் அழைத்து சென்றுவிடுவார். அதுமட்டுமில்லாமல் வீட்டுக்கு உணவு டெலிவரி கொடுக்கும்  இடங்களில் தன்னுடன் அழைத்து செல்கிறார். இவர் நாய் மீது வைத்த பாசம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. 

click me!