தமிழகத்தில் மழைக்கான அறிவிப்பு..! சென்னை மக்கள் மட்டும் பாவமோ பாவம்...!

Published : May 11, 2019, 03:46 PM IST
தமிழகத்தில் மழைக்கான அறிவிப்பு..! சென்னை மக்கள் மட்டும் பாவமோ பாவம்...!

சுருக்கம்

சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவே தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இது மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.  

தமிழகத்தில் மழைக்கான அறிவிப்பு..! 

சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவே தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இது மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

இதற்கிடையில் வெப்ப சலனம் காரணமாக மீண்டும் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை அல்லது ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாகவே அக்னிநட்சத்திர அனல் காற்றில் இருந்து தப்ப முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

அதேவேளையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வந்தாலும், சென்னையில் லேசான மழை கூட இல்லாதது சென்னை மக்களை ஒருவிதத்தில் வாட்டி வதைக்கிறது என்றே சொல்லலாம்.

அதே நேரத்தில் அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் மட்டுமே காணப்பட வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சென்னையை பொருத்தவரையில் மழை என்பது பகல் கனவாகவே இருக்கிறது என்பதால் சென்னை மக்கள் சற்று அதிருப்தியில் உள்ளனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த விஷயங்கள் எப்போதும் திருப்தியே தராது- சாணக்கியர்
படுக்கையறையில் 'சிலந்தி செடி' வைங்க;நன்மைகள் பெருகிக் கொண்டே இருக்கும்