செம கெத்து காட்டப்போகும் மழை... வானிலை மையம் அறிவிப்பு..!

Published : Apr 12, 2021, 11:33 AM IST
செம கெத்து காட்டப்போகும் மழை... வானிலை மையம் அறிவிப்பு..!

சுருக்கம்

குமரி கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சியால், தென் மாவட்டங்களில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது. 

குமரி கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சியால், தென் மாவட்டங்களில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது. வரும், 15ம் தேதி வரை மழை தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரி கடல் பகுதியில், 2 கி.மீ., உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் கோடை மழை கொட்டி வருகிறது. நேற்று முன்தினம் பல இடங்களில் பரவலாக மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

வரும் நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ‘’மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில், ஓரிரு இடங்களில், இன்று லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யலாம். தென் மாவட்டங்களில் நாளை மிதமான மழை பெய்யும்.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், 14, 15ம் தேதிகளில், ஒரு சில இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, தேனி, கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், கனமழையும் பெய்யும். சென்னையில் அதிகபட்சம், 35 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்’’ என அவர் தெரிவித்தார்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Uric Acid : யூரிக் அமில பிரச்சினை இருந்தா இந்த '4' பருப்பு வகைகளை சாப்பிடாதீங்க! நிலைமை மோசமாகிடும்
Leadership Skills: உலகையே வழிநடத்தும் 5 ரகசியங்கள்! இனி நீங்கதான் எல்லோருக்கும் Boss!