மகிழ்ச்சியான செய்தி ..! அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை..!

Published : Jun 29, 2019, 03:13 PM IST
மகிழ்ச்சியான செய்தி ..! அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை..!

சுருக்கம்

தமிழகத்தில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

மகிழ்ச்சியான செய்தி ..! அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை..! 

தமிழகத்தில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதியில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

நேற்று கோடம்பாக்கம் நுங்கம்பாக்கம் திநகர் கிண்டி தேனாம்பேட்டை சைதாப்பேட்டை மீனம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென பெய்த மழையால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இன்றும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்ற செய்தி மக்கள் மனதை சற்று குளிர்ச்சி அடைய செய்துள்ளது.

கடந்த 2 மாத காலமாக சென்னையில் வரலாறு காணாத அளவிற்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவி வந்தது.  தற்போது இன்னும் ஒரு சில இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் அதற்கான நடவடிக்கையை ஆளும் அரசு விரைந்து எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குறைகூறி வருகிறது.

இருந்தபோதிலும், போதிய அளவு மழை இருந்தால் மட்டுமே, தண்ணீர் பற்றாக்குறையில் இருந்து மீள முடியும் 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Summer Drinks: வெயிலை சமாளிக்க 9 சூப்பர் ஹோம்மேட் பானங்கள்! உடம்புக்கும் நல்லது, தெம்பாவும் இருக்கலாம்!
Climate Change: வெறும் ஆரம்பம்தான்! 2050-க்குள் இத்தனை கோடி மரணங்களா? உலகையே உலுக்கும் புள்ளிவிவரம்!