டிகிரி முடித்தவர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்...! வேலையை வாரி வழங்குது ரயில்வே துறை..!

By ezhil mozhiFirst Published Mar 18, 2019, 2:44 PM IST
Highlights

டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வே துறையில் அதிக வேலை வாய்ப்பு காத்திருக்கிறது 

டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வே துறையில் அதிக வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. இந்திய ரயில்வேயில் தொழில்நுட்பம் சாராத பிரிவுகளில் 35,227 காலி பணியிடங்கள் உள்ளது என ரயில்வே துறை அறிவித்து உள்ளது. 

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய நாள்: மார்ச் 1 முதல் 31 மார்ச் 2019 வரை 

தேர்வு  கட்டணம் செலுத்த கடைசி நாள் 5 ஏப்ரல் 2019. இதற்கான கணினி வழித்தேர்வு ஜூன் முதல் செப்டம்பர் 2019. இந்த பணிக்காக விண்ணப்பிக்க குறைந்த பட்ச வயதுவரம்பு 18 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 33 

சம்பளம் : 19 ,900 முதல் ரூ.35,400 வரை கிடைக்கும்

பொது பிரிவினருக்கு தேர்வுக்கு கட்டணம் : ரூ.500  

மற்ற பிரிவினருக்கு ரூ. 250 என்றும் நிர்ணயம் செய்யப் பட்டு உள்ளது.

கல்வித்தகுதி : ஏதாவது இளங்கலை பட்டம் பெற்று இருந்தால் போதும்.

ஆன்லைன் விண்ணப்பம் : இந்த வேலைக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். www.rrbchennai.gov.in என்ற இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித்தேர்வு, டைப்பிங்  திறமையை பொறுத்து தேர்வு செய்யப் படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!