நிறைமாத கர்ப்பிணி வளைகாப்பு முடிந்தவுடன் வாக்கு அளிக்க வந்த அற்புத காட்சி..!

Published : Apr 18, 2019, 05:42 PM IST
நிறைமாத கர்ப்பிணி வளைகாப்பு முடிந்தவுடன் வாக்கு அளிக்க வந்த அற்புத காட்சி..!

சுருக்கம்

இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது முதல் முறையாக ஓட்டு போடும் இளம் தலைமுறையினர் முதல் பெரியவர்கள் வரை அவர்களது கடமையை பூர்த்தி செய்ய இன்று  ஆவலாக ஓட்டு போட்டு வருகின்றனர்.  

இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது முதல் முறையாக ஓட்டு போடும் இளம் தலைமுறையினர் முதல் பெரியவர்கள் வரை அவர்களது கடமையை பூர்த்தி செய்ய இன்று  ஆவலாக ஓட்டு போட்டு வருகின்றனர்.

அதில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் உள்ளது. சினிமா பிரபலங்கள் முதல் அதிகாரிகள் வரை பொது மக்களோடு மக்களாக நின்று ஓட்டு போடும் காட்சியை பார்க்க முடிந்தது. இதெல்லாம் தவிர்த்து நூறு வயதை கடந்த வயதானவர் முதல் கர்ப்பிணி பெண்கள் மற்றும் திருமணம் முடிந்த கையோடு தம்பதிகள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்ட விதம் என பல சம்பவங்கள் நடந்தேறியது.

அதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலத்தில் பெண் ஒருவர் வளைகாப்பு முடிந்த கையோடு வாக்களிக்க வந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நிகழ்ச்சி அடைய செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் மங்களூரு பகுதியை சேர்ந்தவர் காவியா என்ற நிறைமாத கர்ப்பிணி. இன்று அவருக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது. வாக்களிக்க வேண்டும் என ஆர்வமாக வளைகாப்பு முடிந்த கையோடு பட்டு சேலையுடன் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்தார். இவரை பார்த்த மற்றவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவருடைய போட்டோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Spinach for Liver Health : இந்த கீரைய சாதாரணமா நினைக்காதீங்க! கல்லீரல் நோயை தடுக்கும் அருமருந்து
Healthy Breakfast Ideas : 60 வயதிலும் சுறுசுறுப்பா இருக்கனுமா? 'தினமும்' காலைல இதை சாப்பிடுங்க