கொளுத்தும் வெயில்..! மக்கள் பெரும் அவதி..! சாதாரணமாகவே 104 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவு...!

Published : Apr 04, 2019, 01:25 PM IST
கொளுத்தும் வெயில்..! மக்கள் பெரும் அவதி..! சாதாரணமாகவே 104  டிகிரி பாரன்ஹீட் வரை பதிவு...!

சுருக்கம்

தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் சுட்டெரித்து உள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்ததாவது...  

தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் சுட்டெரித்து உள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்ததாவது...

"தமிழகத்தை சுற்றி நிலப்பகுதியிலும், கடலோர பகுதிகளிலும் காற்று சுழற்சி தற்போது ஏதும் இல்லை..இதன் காரணமாகவே தமிழகத்தின் பல உள் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட மூன்று முதல் ஐந்து டிகிரி வரை அதிகரித்து காணப்படுகிறது.

நேற்று மாலை பதிவு செய்யப்பட்ட வெப்பநிலையின் விவரம் இதோ... கரூர் பரமத்தியில் 104 டிகிரி, திருத்தணியில் 102 டிகிரி, சேலத்தில் 103 டிகிரி, மதுரை தர்மபுரி 101 டிகிரி, கோவை பாளையங்கோட்டை நாமக்கல் திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

மேலும் அடுத்து வரும் சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி வரை அதிகரித்து காணப்படும் என்றும் அனல் காற்றும் அவ்வப்போது வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

பாரம்பரிய ஆடைகளுக்கு ஏற்ற 6 அழகான கலர் ஸ்டோன் கொலுசு டிசைன்கள்!
Washing Machine Cleaning Tips: உங்க வாஷிங் மெஷின் லைஃப் லாங் வரணுமா? அப்போ மாசத்துக்கு ஒருமுறை இதை செய்யுங்க!