Oral Hygiene Tips : சிகரெட் பழக்கம் இருக்கா? அப்ப இந்த விஷயங்களை கண்டிப்பா ஃபாலோ பண்ணனும்

Published : Nov 01, 2025, 04:06 PM IST
Oral hygiene tips for smokers

சுருக்கம்

புகைப்பிடிப்பவர்களுக்கு வாய்வழி சுகாதாரம் ரொம்வே முக்கியம். எனவே அதை மேம்படுத்துவதற்கான சில வழிகள் உள்ளன. அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

பொதுவாகவே சிகரெட் பிடித்தால் நுரையீரல், இதயம் போன்ற உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் என்று நாம் அனைவரும் அறிந்ததே. இதுதவிர புகைப்பிடித்தால் மற்றொரு உறுப்பும் பாதிக்கப்படும் தெரியுமா? அது என்னவென்றால் வாய் தான்.

ஆமாங்க, சிகரெட், ஹூக்கா போன்ற புகையிலை பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தினால் பல் சிதைவு, ஈறுகளில் நோய் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக வாய் புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதாக சொல்லப்படுகின்றது. இதனால் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்படும். நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தாலும் வாய்வழி சுகாதாரம் மிகவும் அவசியம். அப்போதுதான் அபாயங்களை முற்றிலும் குறைக்கவும் ,தவிர்க்கவும் முடியும். எனவே, வாய் ஆரோக்கியத்தை பாதுகாப்பது எப்படி? வாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.

சிகரெட் பிடித்தால் பற்கள் மற்றும் ஈறுகளை எவ்வாறு பாதிக்கும்?

  • சிகரெட்டுகளில் இருக்கும் புகையிலையை பற்ற வைத்த பிறகு அதில் ஆயிரக்கணக்கான இரசாயனங்கள் இருப்பதால், அவை ஈறு திசுக்களை, பற்களை மோசமாக சேதப்படுத்தும்.
  • நம் வாயில் இருக்கும் உமிழ்நீரானது ஈறுகள், பற்களில் இருக்கும் குப்பைகளை அகற்றி, பல் சிதைவு ஏற்படாமல் தடுக்கும். ஆனால் புகையிலை பிடித்தால் அதன் பாதுகாப்பு தரமானது குறைந்துவிடும்.
  • அதுபோல புகைப்பிடித்தால் ஈறு நோய் மற்றும் பல் சொத்தையை ஏற்படுத்தி, கிருமிகள் பெருகுவதற்கு வழிவகுக்கும்.
  • புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் ஈறுகளில் அறுவை சிகிச்சை செய்யும் போது அதில் சிக்கல் அல்லது தோல்வி வர வாய்ப்பு அதிகமுள்ளன.
  • புகைப்பிடித்தால் தொண்டை, வாய் மற்றும் நாக்கில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

புகைப்பிடிப்பவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய வாய்வழி சுகாதாரங்கள் :

- புகை பிடிப்பவர்கள் தினமும் இரண்டு முறை ஃப்ளோரைடு இருக்கும் டூத் பேஸ்ட் கொண்டு பல் துலக்க வேண்டும். அதுவும் மென்மையாக. டூத் பேஸ்டில் இருக்கும் ஃப்ளோரைடு பற்களில் இருக்கும் எனாமலை வலுப்படுத்தும். மேலும் பற்களில் துவாரங்கள் ஏற்படுவதை தடுக்கும்.

- தினமும் flossing செய்தால் ஈறு நோய் ஏற்படுவதைத் தடுக்கும்.

- அதுபோல புகைப்பிடிப்பவர்கள் அல்கஹால் இல்லாத மவுத்வாஷை பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அது தான் முறையாக பாக்டீரியாக்களை நீக்கும்.

- அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். அதுவும் குறிப்பாக வாய் வறட்சி பிரச்சனை உள்ளவர்கள் இந்த பழக்கத்தை தொடர்ந்து செய்து வந்தால் பல் சொத்தை ,வாய் துர்நாற்றம் ஏற்படும் அபாயம் குறைக்கும்.

- புகை பிடிப்பவர்கள் கண்டிப்பாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்தித்து ஈறுகளில் ஏதேனும் நோய் தொற்றுகள் இருக்கிறதா என்பதை கண்டறிந்து அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளவும்.

புகைப்பிடிப்பவர்களுக்கு இந்த வாய்வழி சுகாதாரம் குறுகிய காலத்திற்கு மட்டுமே உதவும். எனவே, புகை பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் நிறுத்திவிட்டால் அபாயங்கள் ஏற்படுவதை குறைத்து விடலாம். புகை பிடிப்பதை நிறுத்தினால் வாய் தொடர்பான பிரச்சனைகள் மட்டுமல்ல, பிற உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Rasam Recipes : ரசத்தில் '10' வகையா? வெறும் பத்து நிமிடத்தில் செய்ய ஈஸியான 'ரசம்' ரெசிபி!!
Mineral Water : மினரல் வாட்டரில் 'வெந்நீர்' போட்டு குடிக்கலாமா? அதனால் நன்மையா? தீமையா? உண்மை தகவல்