
நாடு முழுவதும் வெங்காயம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மழையால் பயிர்கள் சேதம், குறைந்த விளைச்சல் என்று பல காரணங்கள் இருந்தாலும், விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு தவறி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
அதுவும் தற்போது சின்ன வெங்காயம் கிலோ 200 ரூபாய் வரையும், பெரிய வெங்காயம் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெங்காயத்தின் விலை இன்னும் அதிகரிக்கு என கூறப்படுகிறது.
இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி நகரில் ஒரு கிலோ வெங்காயம் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. லகுராபிர் என்ற பகுதியில் உள்ள செல்போன் கடையில், ஸ்மார்ட்போன் வாங்கினால், ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரணாசியின் லகுரபிர் என்ற இடத்தில் செல்போன் கடையில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை அறிவிப்புக்கு பின்னர் கடையில் கூட்டம் அதிகரித்துள்ளதாகவும், செல்போனை நிறைய பேர் வாங்க வருவதாகவும் கடைக்காரர் தெரிவித்துள்ளார்.
வாரணாசியில் ஒரு கிலோ வெங்காயம் 130 முதல் 135 ரூபாய்க்கு விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.