திரும்ப பெறப்படுகிறதா 100 ரூபாய் நோட்டுகள்? ரிசர்வ் வங்கியே வெளியிட்ட முக்கிய தகவல்..!

Published : Jan 25, 2021, 05:24 PM IST
திரும்ப பெறப்படுகிறதா 100 ரூபாய் நோட்டுகள்?  ரிசர்வ் வங்கியே வெளியிட்ட முக்கிய தகவல்..!

சுருக்கம்

பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவதாக பரவும் தகவல் உண்மையில்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. 

பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவதாக பரவும் தகவல் உண்மையில்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. 

இந்தியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வரும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் திரும்ப பெற திட்டமிட்டுள்ளது என்று ஊடகங்களில் சில தினங்களில் செய்திகள் வெளியாகின. அவை புழக்கத்தில் இருக்காது என்று ரிசர்வ் வங்கியின் துணைப் பொதுச்செயலாளர் மகேஷ் தெரிவித்ததாக இந்தச் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பரவும் செய்தி தவறானது என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- விரைவில் பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப் போவதாக வெளியான தகவல் தவறானது. பழைய ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் திட்டம் ஏதும் இல்லை. அவ்வாறு வெளியாகும் செய்திகள் தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்
இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்