மதுபான ப்ரியர்களுக்கு ஹெப்பி நியூஸ்... டாஸ்மாக்கில் ரூ5, 10 தொல்லை, இனி இல்லை..!

Published : Jan 21, 2021, 02:49 PM IST
மதுபான ப்ரியர்களுக்கு ஹெப்பி நியூஸ்... டாஸ்மாக்கில் ரூ5, 10 தொல்லை, இனி இல்லை..!

சுருக்கம்

டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுபானங்களை, அதிக விலைக்கு விற்கும் விற்பனை பிரதிநிதிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுபானங்கள் விற்பனை குறித்து உரிய விதிமுறை, நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றபடவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டது. விதிமீறியோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு டாஸ்மாக் மேலாண் இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.

தஞ்சையை சேர்ந்த ராஜேஸ்வரி பிரியா தொடா்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அரசு மதுக்கடைகளில் மதுபானங்களின் விலை பட்டியரை வைக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுக்கடைகளில் விலைப்பட்டியலை வைக்க தவறினால் பிரதிநிதிகள் உட்பட அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமா்வு உத்தரவிட்டுள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்
இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்