பீதியை கிளப்பும் புதிய அறிவிப்பு..! அடுத்த 3 நாட்களுக்கு இப்படி தான் இருக்குமாம்..!

Published : Mar 21, 2019, 04:25 PM IST
பீதியை கிளப்பும் புதிய அறிவிப்பு..! அடுத்த 3 நாட்களுக்கு இப்படி தான் இருக்குமாம்..!

சுருக்கம்

அடுத்த 3 தினங்களுக்கு, தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்து உள்ளது    

அடுத்த 3 தினங்களுக்கு, தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது  

அதன் படி, தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வறண்ட வானிலை காணப்படும் என்றும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிலிலும் குறிப்பாக ஒரு சில மாவட்டங்களில் அதிக வெப்பநிலை நிலவ வாய்ப்பு உள்ளதாம். வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், திருவண்ணாமலை, மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட  வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

அதே போன்று சென்னையை பொறுத்தவரை இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. நாளையும் மேக மூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

பேரிச்சம் பழம் வைத்து செய்த healthy Ferrero Rocher chocolate | No Sugar Chocolate recipe
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!