
புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தற்போது, பண தட்டுப்பாடு காரணமாக , புத்தாண்டு கொண்டாட்டங்கள் எந்த அளவுக்கு இருக்கும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொல்லப்போனால் ஒரு சில நட்சத்திர ஓட்டல்களில் கொண்டாடப்படும் , புத்தாண்டு நிகழ்வுகள் , இந்த வருடமும் அதிகரிக்கும் என தான் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்தின் முன்னேற்பாடாக , ஆன்லைன் புக்கிங் தற்போது சூடு பிடித்துள்ளது. அதாவது, புத்தாண்டை ஒட்டி, பெரிய பெரிய நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் பப், டிஜெ என அனைத்திலும் இன்றைய இளசுகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனைதொடர்ந்து, இப்பொழுதே ஆன்லைன் புக்கிங் சூடு பிடித்துள்ளதாம் .......ரொக்கமில்லா பரிவர்த்தனை ( கிரெடிட் / டெபிட் ) கார்டை பயன்படுத்தி , ஆன்லைன் புக்கிங் செய்பவர்களுக்கு, புதிய2000 ரூபாய் நோட்டு கிடைக்கவில்லை என்ற கவலை இல்லை என்பதாலும், அதே சமயத்தில் வசதி படைத்தவர்களுக்கு, ஸ்டார் ஓட்டல்களில் எப்பொழுதும் கொண்டாட்டம் , கொண்டாட்டமாக தான் இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
குறிப்பு : பப் பார்ட்டிகளில், புத்தாண்டு கொண்டாடும் நிகழ்வில் பங்கேற்கும் திட்டம் கடந்த ஆண்டு 24 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு 29 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.