இந்தியர்களுக்கு இதனால்தான் இதய நோய் என்ற கருத்துக்கு மாறாக புதிய ஆச்சரிய ஆய்வு முடிவு!!

Published : Nov 03, 2022, 05:55 PM IST
இந்தியர்களுக்கு இதனால்தான் இதய நோய் என்ற கருத்துக்கு மாறாக புதிய ஆச்சரிய ஆய்வு முடிவு!!

சுருக்கம்

இந்தியர்களுக்கு ஏன் அதிகமாக இதய நோய் வருகிறது என்பதற்கு புதிய பதில் கிடைத்துள்ளது. இது முந்தைய கருத்துக்களுக்கு நியாயம் கற்பிப்பதாகவே அமைந்துள்ளது.

தமனிகளின் சிறிய துளை அல்லது விட்டம் காரணமாக இந்தியர்கள் இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற பொதுவான கருத்து நிலவி வந்தது. ஆனால், இது காரணமல்ல என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. சர் கங்கா ராம் மருத்துவமனை இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதய நோய்க்கு இந்தியர்களின் சிறிய மேல் உடல் அமைப்புதான் காரணம், தமனியின் சிறிய விட்டம் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வுக்கு 250 பேர் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்த முடிவு இந்தியன் காலேஜ் ஆப் கார்டியாலஜி இதழிலில் வெளியாகியுள்ளது. இதில் வெளியாகி இருக்கும் முடிவுகள் அனைத்தும், மக்களின் பொதுவான கருத்துகளுக்கு நேர்மாறாக அமைந்துள்ளது. தமனியின் சிறிய விட்டம் தான்  இதய கோளாறுகளுக்கு அதிக காரணம் என்று கருதப்பட்டு வந்தது. 

மழை காலங்களில்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 உணவு வகைகள்!

"ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவர்களில் 51 சதவீதம் பேர் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், 18 சதவீதம் பேர் நீரிழிவு நோயாளிகள், 4 சதவீதம் பேர் புகைப்பிடிப்பவர்கள், 28 சதவீதம் பேர் ரத்தத்தில் அதிக கொழுப்பு உடையவர்கள் , மற்றும் 26 சதவீதம் பேர் பரம்பரையாக இதய நோய் வரலாறு கொண்டவர்கள் என்பதை கண்டறிந்து இருப்பதாக இந்த ஆய்வை சமர்ப்பித்து இருக்கும் சர் கங்கா ராம் மருத்துவமனை தலைவரும், இதய நோய் பிரிவின் தலைவருமான டாக்டர். ஜேபிஎஸ் சானி தெரிவித்துள்ளார்.

ஆண்களுக்கான சராசரி தமனி விட்டம் பெண்களை விட கணிசமாக பெரியதாக இருக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியர்களின் சிறிய மேல் உடற்பரப்பு காரணமாக தமனியின் விட்டமும் சிறியதாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. சிறிய ரத்த தமனி விட்டம் காரணமாக ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக இந்தியர்களுக்கு தமனிகளில் கொழுப்பு படிவு ஆபத்து இருக்கும் என்று கருதப்பட்டு வந்தது. எனவே, இந்தியர்களின் இதயப் பிரச்சனைகளுக்கு சிறிய விட்டம்  கொண்ட தமனிகள்தான் காரணம் என்று கூறப்பட்டு வந்தது. தற்போது இது தவறு என்பது நிரூபணமாகியுள்ளது. 

தாமரை வேரின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..நாம் ஏன் உட்கொள்ள வேண்டும், என்பதற்கான 7 காரணங்கள்..!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்
குளிர்காலத்தில் 'ஆஸ்துமா' நோயாளிகளுக்கு ஆகாத உணவுகள்!!