அடிதூள்..! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி முடிவு..!மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சியோ அதிர்ச்சி..!

Published : Jan 30, 2019, 07:29 PM ISTUpdated : Jan 30, 2019, 07:32 PM IST
அடிதூள்..! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி முடிவு..!மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சியோ அதிர்ச்சி..!

சுருக்கம்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி மாற்றங்களை கல்வித்துறையில் கொண்டு வந்தார். அவருடைய ஒவ்வொரு திட்டமும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.  

அடிதூள்..! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி முடிவு..!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி மாற்றங்களை கல்வித்துறையில் கொண்டு வந்தார். அவருடைய ஒவ்வொரு திட்டமும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

குறிப்பாக புதிய பாடத்திட்டம் முதல், பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு, இலவச நீட் தேர்வு மையங்கள், தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளியிலும் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் என பல திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்நிலையில், இயற்கையை பாதுகாக்கவும் மாணவர்கள் மத்தியில் மரம் வளர்ப்பது பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும், ஒரு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன். அதன்படி,
 
மரக்கன்று நட்டால் 2 மதிப்பெண் என்ற ஆணை பிறப்பிக்கபட உள்ளது என தெரிவித்து உள்ளார். மேலும், இத்திட்டத்தின் மூலம் 2.5 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்படும் என குறிப்பிட்டு உள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.

மேலும் மருத்துவ படிப்பில் 1000 பேர், அரசு பள்ளிகளில் இருந்து இடம்பெறுவர் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார் அமைச்சர் செங்கோட்டையன். இந்த அறிவிப்பு மாணவர்கள் மட்டுமின்றி, மக்கள்  மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Pregnancy Diet : கர்ப்பிணிகளே உஷார்!! 'கருவை' தாங்கும் பெண்கள் சாப்பிடவே கூடாத பழங்கள்!!
Winter Constipation Remedies: குளிர்காலத்தில் மலச்சிக்கல் தொந்தரவு கஷ்டமில்லாம 'காலைக்கடனை' முடிக்க சூப்பர் டிப்ஸ்