சென்னை மக்களே..! உங்களுக்கு குஷியான செய்தி..!

Published : Mar 30, 2019, 09:08 AM IST
சென்னை  மக்களே..! உங்களுக்கு குஷியான செய்தி..!

சுருக்கம்

நாளுக்கு நாள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தும் மக்கள் அதிகரித்து வருகின்றனர்.  

நாளுக்கு நாள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தும் மக்கள் அதிகரித்து வருகின்றனர்.  

மேலும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தும் போது,நேரம் வீணாவதை தடுக்க முடியும், எளிதாக பயண தூரத்தை விரைவில் அடைய முடியும், எந்த அலைச்சலும் இல்லை, அதுமட்டுமா கோடைகாலம் நெருங்கி விட்டதால் இருசக்கர வாகனத்தை இயக்கவே பெரும் சிரமமாக இருக்கும்... காரணம் சுட்டெரிக்கும் வெயில் தான்.

இதனையெல்லாம் உணர்ந்த மக்கள் தற்போது மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்த மும்முரம் காட்டி வருகின்றனர்.மெட்ரோ ரயில் நிர்வாகமும் மக்களின் தேவையை கருத்தில் கருத்தில் தற்போது ஒரு நல்ல முடிவை எடுத்து உள்ளது. அதன் படி, தற்போது காலை 6 மணிக்கு முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை, விரைவில் அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்க உள்ளதாக அறிவித்து உள்ளது 

இந்த  திட்டம் அமலுக்கு வந்த உடன், அதிகாலை, 4:30 மணியில் இருந்து இரவு, 11:00 மணி வரை ரயில்கள் இயக்கவும், மேலும் பயணிகளின் வருகையை பொறுத்து, ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்