மருத்துவ காப்பீடு - கோர்ட் முக்கிய உத்தரவு..! மக்கள் மகிழ்ச்சி..!

Published : May 29, 2019, 04:59 PM ISTUpdated : May 29, 2019, 05:04 PM IST
மருத்துவ காப்பீடு - கோர்ட் முக்கிய உத்தரவு..! மக்கள் மகிழ்ச்சி..!

சுருக்கம்

முதலமைச்சர் ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டம் தொடர்பாக சக்திவேல் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதிகள் இன்று தமிழக அரசுக்கு சரமாரி கேள்வியை எழுப்பி உள்ளனர்.  

மருத்துவ காப்பீடு - முக்கிய உத்தரவு..! மக்கள் மகிழ்ச்சி..!

முதலமைச்சர் ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டம் தொடர்பாக சக்திவேல் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதிகள் இன்று தமிழக அரசுக்கு சரமாரி கேள்வியை எழுப்பி உள்ளனர்.

அதன் படி, முதலமைச்சர் ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டம் எப்போது தொடங்கப்பட்டது? காப்பீட்டு தொகை சிகிச்சை பட்டியலில் அனுமதிக்கப்பட்ட நோய்கள் எவை எவை? மருத்துவ செலவுக்கான உச்ச வரம்பு ஏதும் உள்ளதா?  என உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்ட தொகையை அதிகரிக்க கோரிய இந்த வழக்கின் விசாரணையில், 8 வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு முன்னதாக, சக்திவேல் தொடர்ந்த இந்த வழக்கில் முக்கிய 
விஷயமாக, சிகிச்சைக்காக 30% மட்டுமே காப்பீட்டு தொகையாக வழங்கப்படுகிறது. கஜா பாதிப்புக்கு பின் லிஸ்டில் சேர்க்கப்பட்ட நோய்கள் எவை எவை..? அதற்காக மருத்துவ காப்பீட்டுக்கான தொகையை அதிகரித்து உள்ளதா தமிழக அரசு ? என பல்வேறு கேள்விகள் அடங்கிய இந்த வழக்கு விசாரணையில் இருந்தது.

இந்த நிலையில் தான்,இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தமிழக அரசுக்கு சரமாரி கேள்விகளை முன்வைத்து, 8 வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Bald Head : வழக்கை தலைல கூட முடி முளைக்கனுமா? தேங்காய் எண்ணெயுடன் இந்த '1' பொருள் கலந்து யூஸ் பண்ணுங்க!
Burnt Vessels Cleaning Tips : அடிபிடித்த பாத்திரத்தை 'ஐஸ் கட்டி' வைச்சு சூப்பரா கிளீன் பண்ணிடலாம்.. எப்படி தெரியுமா?