கோடைக்கு குளிர்ச்சியானது “சர்பத்”...அதில் பயன்படுத்துவதோ  பிணவறை ஐஸ் கட்டியா..?

 
Published : Apr 20, 2017, 06:14 PM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
கோடைக்கு குளிர்ச்சியானது “சர்பத்”...அதில் பயன்படுத்துவதோ  பிணவறை ஐஸ் கட்டியா..?

சுருக்கம்

marchurai ice is using

கோடைக்காலம் நெருங்கியதால்,மக்கள் அதிகமாக குளிர்பானங்களை அருந்த விருப்பம் தெரிவிக்கின்றனர். அதிலும் சமீபத்திய காலத்தில் சர்பத் என்ற பானம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் அதில் பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகள் பிணவறைக்கு பயன்படுத்தும் ஐஸ் கட்டிகள் என   கொல்கத்தா மாநகராட்சி மேயர் அதின் கோஷ் உறுதி செய்துள்ளார்.

அதாவது கொல்கத்தாவில் உள்ள புதிய மார்கெட் பகுதியில் திடீரென சோதனையில் ஈடுபட்ட, கொல்கொதா மாநகராட்சி மேயர், பிணவறைக்கு பயன்படுத்தப் படும் ஐஸ் கட்டிகள் தான் சர்பத்  குளிர்பானத்திற்கு பயன்படுத்தப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவலை உறுதி செய்தததையடுத்து, மனசாட்சியே இல்லாமல் இந்த செயலில் ஈடுபட்ட 1௦ வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்  

இதில் அதிர்ச்சி தரும் கூடுதல் விவரம் என்னவென்றால், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவு வியாபாரிகள் இந்த வகையான ஐஸ் கட்டிகளை உபயோகம் செய்கிறார்கள் என்பதே. இதற்கு காரணம்  ஐஸ்கியூப்ஸ் விலை அதிகம் என்பதால், பிணவறை ஐஸ் கட்டிகளை பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Walnuts Benefits : வால்நட்ஸ் சாப்பிட சரியான முறை இதுதான்!! அதிக நன்மைகளுக்கு இதை ஃபாலோ பண்ணுங்க
ஆண்களே! உலகமே அழிஞ்சாலும் மனைவி கிட்ட இந்த '3' விஷயங்களை சொல்லாதீங்க