Late-night sleeping Effect : தினமும் நைட்டு லேட்டா தூங்கினால்.. இந்த ஆபத்து அதிகம்.. நிபுணர்கள் எச்சரிக்கை..

Published : Jun 19, 2023, 09:35 PM ISTUpdated : Jun 19, 2023, 10:51 PM IST
Late-night sleeping Effect : தினமும் நைட்டு லேட்டா தூங்கினால்.. இந்த ஆபத்து அதிகம்.. நிபுணர்கள் எச்சரிக்கை..

சுருக்கம்

சமீபத்திய ஆய்வின்படி, இரவில் சீக்கிரம் தூங்க வேண்டும் எனவும், அதிகாலையில் எழுந்திருக்கவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் குறிப்பாக இளம் தலைமுறையினர் இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதையும், காலையில் தாமதமாக எழுவதையும் பழக்கமாக கொண்டுள்ளனர். சமீபத்திய ஆய்வின்படி, இரவில் சீக்கிரம் தூங்க வேண்டும் எனவும், அதிகாலையில் எழுந்திருக்கவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இரவில் வெகுநேரம் விழித்திருக்கும் மக்களின் பிரிவு பெரும்பாலும் இரவு ஆந்தைகள் என்று குறிப்பிடப்படுகிறது. இரவில் தாமதமாக தூங்குவது உங்கள் தூக்க சுழற்சியை சீர்குலைத்து பல்வேறு நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

சீக்கிரம் தூங்க செல்லும் வழக்கத்தைக் கடைப்பிடிப்பவர்களை விட, இரவில் வெகுநேரம் விழித்திருப்பவர்கள் இளம் வயதிலேயே இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இரவு வெகுநேரம் வரை விழித்திருப்பவர்கள் மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் போன்ற பழக்கங்களுக்கு ஆளாகிறார்கள் என்றும், இது அவர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இரவில் வெகுநேரம் விழித்திருக்கும் 23,000 பேரின் மாதிரியில் இருந்து சுமார் 8,728 நபர்களின் இறப்பு பதிவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். சீக்கிரம் எழுந்தவர்களைக் காட்டிலும் 9% பேருக்கு முன்கூட்டியே மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இரவில் அதிக நேரம் விழித்திருக்கும் பெரும்பாலான நபர்களுக்கு, இதய நோய், நீரிழிவு, எடை அதிகரிப்பு மற்றும் மனச்சோர்வு ஆகிய விளைவுகள் ஏற்படும். ஒரு நிலையற்ற தூக்க சுழற்சி தோல் இளமைத்தன்மையை இழக்க வழிவகுக்கும். கூடுதலாக, கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் சோர்வாக உணர்தல் காரணமாக இது பெரும்பாலும் குறைந்த பணியிட செயல்திறனையும் ஏற்படுத்துகிறது.

மேலும், இரவில் மது அருந்துவதையோ அல்லது புகைபிடிப்பதையோ தவிர்க்கும் நபர்களுக்கு மரணம் ஏற்படும் அபாயம் குறைவு என்பதும் தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், அதிகாலையில் எழுந்திருப்பவர்களை விட இரவில் வெகுநேரம் விழித்திருக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

லேப்டாப் மற்றும் மொபைல் போன்களை அதிகமாகப் பயன்படுத்துவதும், கண்களைக் கஷ்டப்படுத்தி, தூக்கத்தைத் தடை செய்வதும் தாமதமாகத் தூங்குவதற்கு மற்றொரு பொதுவான காரணம். தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. இந்த கேஜெட்கள் வெளியிடும் நீல ஒளி, தூக்க முறைகளை சீர்குலைத்து டிஜிட்டல் கண் அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.

உடல் நலத்திற்கு நீண்டகால தீங்கு விளைவிக்கும் நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும் என்பதால், சீக்கிரம் படுக்கைக்குச் சென்று சீக்கிரம் எழுந்திருக்கும் பாரம்பரிய நடைமுறையை எப்போதும் கடைப்பிடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Foods for Hair Loss : இந்த '5' உணவுகள் முடி கொட்டுறத அதிகரிக்கும் இனிமேல் குறைச்சுக்கோங்க
Heart Healthy Exercises : ஆயுசுக்கும் இதயம் ஆரோக்கியமாக இருக்க '5' பயிற்சிகள் போதும்! தினமும் செய்ங்க