மீண்டும் ஜியோ 3 மாதம் இலவசம்...! உச்ச அளவு சலுகையால் குஷியான வாடிக்கையாளர்கள்...!

First Published Feb 13, 2018, 2:02 PM IST
Highlights
jio entered in broadband and announces 3 months free offer


சந்தையை கலக்க மீண்டும் களத்தில் குதிக்க உள்ளது ஜியோ....

ஜியோ அறிமுகமான பிறகு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து தற்போது வரை, ஜியோ வை மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றனர்..

இந்நிலையில்,தற்போது பிராட்பேண்ட் பிரிவில் களமிறங்கி உள்ளது....

அதன்படி, அவரு செப்டம்பர் மாதம் முதல் ஜியோ பிராட்பேண்ட்  செயல்பாட்டிற்கு வர  உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது

அதன்படி

பட்ஜெட் விலையில் நொடிக்கு 1 ஜி.பி. (1 Gbps) வேகத்தில் இண்டர்நெட் வழங்க இருப்பதாக தகவல்  வெளியாகி உள்ளது  

தற்போது,இதற்கான  முன்னோட்டமாக  இந்தியாவின் பத்து நகரங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மும்பை, டெல்லி, ஆமதாபாத், ஜாம்நகர், சூரத் மற்றும் வதோதரா உள்ளிட்ட இடங்களில் ஜியோபைபர் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் தற்சமயம் ஒவ்வொரு மாதமும் 100 ஜிபி இலவச டேட்டா வழங்க உள்ளது. அதாவது அறிமுக  சலுகையாக டேட்டா இலவசமாக  வழங்க உள்ளது.அதன்படி மாதம் 100 ஜிபி  வீதம், மூன்று  மாதத்திற்கு  இலவசமாக  வழங்க உள்ளது 

இவை முடிந்ததும், அதன்  பின்னர் படிப்படியாக வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.500க்கு 600 ஜிபி டேட்டாவும், ரூ.2000க்கு 1000 ஜிபி டேட்டா நொடிக்கு 100 எம்.பி. (100 Mbps) வேகத்தில் வழங்க இருக்கிறது என்ற தகவல் ஏற்கனவே  வெளியானது ஒன்று தான்.

ஆனால் இதை விட சூப்பர்  சலுகையை வாரி வழங்க உள்ளதாம்  ஜியோ..

இதனை அறிந்த வாடிக்கையாளர்கள் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

click me!