“6  ஆண்டுகளில் மறுபிறவி எடுத்து பழி தீர்ப்பாராம் ஜெ ” - பீதி  கிளப்புகிறார் பிரபல  ஜோதிடர்...!!

First Published Dec 26, 2016, 2:57 PM IST
Highlights


“6  ஆண்டுகளில் மறுபிறவி எடுத்து பழி தீர்ப்பாராம் ஜெ ” - பீதி  கிளப்புகிறார் பிரபல  ஜோதிடர்...!!

மறைந்த  முதலமைச்சர்  ஜெயலலிதாவின்  ஆவி, கடும்  கோபத்துடன் ,  சாந்தி அடையாமல்  இருப்பதாக பழனியைச் சேர்ந்த  பிரபல ஜோதிடர் அசோக்ஜி தெரிவித்துள்ளார்.

இவர் ஏற்கனவே  பல  முக்கிய  நிகழ்வுகளை  முன்கூட்டியே  கணித்துள்ளார்  என்பது  குறிப்பிடத்தக்கது.

இவர்  கணித்தது....?

சட்டபேரவை தேர்தலில் அதிமுக  வெற்றி பெரும்  என  கணித்தது

ஜெயலலிதா   சிறையில்  இருந்து  வீடு  திரும்புவார்   என  கணித்தது

2015 ஆம் ஆண்டு  இறுதியில் சென்னையில்  வெள்ளம் வரும் அபாயம்  இருக்கும் என  முன்கூட்டியே  அறிவித்து இருந்தது.

இவையனைத்தும் நடந்தது.

இந்நிலையில் தற்போது, மறைந்த முதல்வர் ஜெயலிதாவின்  ஆவி,  சாந்தி  அடையாமல் கடும் கோபத்துடன்  இருப்பதாகவும், தெரிவித்துள்ளார்.

அதாவது,  ஒருவர்  இறந்த  பின்பு, இறந்த நாள் முதல் மூன்று நாட்களுக்குள் அவருக்கு   நிகழ்ந்த, விரும்பத்தகாத நிகழ்வு  நடைபெற்று  இருந்தால்  நிச்சயம்  ஆவி  பலி வாங்கும் என  தெரிவித்துள்ளார்.

அதே சமயத்தில், ஜெயலலிதாவின் ஆவி பூமியில் 2023 ஆம்  ஆண்டு வரை நிச்சயம் இருக்கும் எனவும்,  அது இன்னும் 6 ஆண்டுகளில் மறுபிறவி  எடுத்து  பழிவாங்கும்  எனவும் ஜோதிடர் அசோக்ஜி தெரிவித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

மேலும்,  ஜெயலிதா  பயன்படுத்திய , உடைமைகளை யாரேனும்  கைப்பற்றினாலோ, மோச  வேலையில் ஈடுபட்டாலோ அவர்களை , ஜெ  ஆவி  சும்மா  விடாது என   தெரிவித்துள்ளார்.

ஜோதிடரின்  இந்த கணிப்பு , தற்போது  பெரும் பரபரப்பை  ஏற்படுத்து உள்ளது.

 

click me!