டிஜிட்டலுக்கு மாறிய “ முதல் கிராமம்” அறிவிப்பு .....!!!
தெலுங்கானாவில் உள்ள சித்திபேட் மாவட்டத்தை சேர்ந்த “இப்ராஹிம்பூர்” என்ற கிராமம் முழுவதுமாக பணமில்லா பரிவர்த்தனை என்ற டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு 1200 பேர் வாழ்கின்றனர் .
தென்னிந்தியாவை பொறுத்தவரை முழுவதுமாக டிஜிட்டலுக்கு மாறிய முதல் கிராமம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கிராமத்தில் உள்ள அனைத்து பெரிய மற்றும் சிறிய கடைகளில் கூட , கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்ட் பயன்படுத்தும் விதமாக , ஸ்வைப் மெஷினை பயன்படுத்துகின்றனர்.
தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் , இது குறித்து தன் கருத்தை தெரிவித்துள்ளார். சிறிய டீ கடை முதல் அனைத்து கடைகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளும் கிராமமாக “இப்ராஹிம்பூர்” கிராமம் மாறியுள்ளது என்றும், இந்த கிராமம் இந்தியாவில் உள்ள மற்ற கிராமங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் எனவும் தெரிவித்தார்.