தயவு செய்து இவர்கள் மட்டும் அத்தி வரதரை தரிசிக்க வராதீங்க..! ஆட்சியர் வேண்டுகோள்..!

Published : Jul 20, 2019, 12:36 PM ISTUpdated : Jul 20, 2019, 07:05 PM IST
தயவு செய்து இவர்கள் மட்டும் அத்தி வரதரை தரிசிக்க வராதீங்க..! ஆட்சியர் வேண்டுகோள்..!

சுருக்கம்

அத்திவரதர் வைபவத்தின் 20 ஆவது நாளான இன்றும் பக்தர்களின் கூட்டம் காஞ்சிபுரத்தில் அதிகமாக கூடி உள்ளது.

அத்திவரதர் வைபவத்தின் 20 ஆவது நாளான இன்றும் பக்தர்களின் கூட்டம் காஞ்சிபுரத்தில் அதிகமாக கூடி உள்ளது.

ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ள மிக சிறப்பான நிகழ்வு இது என்பதால், பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது



இதன் காரணமாக 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மிக சிறந்த நிகழ்வு என்பதால், அத்தி வரதரை தரிசிக்க  மக்கள்  கூட்டம் அலை மோதுகிறது. மேலும் நேற்று முன்தினம் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் மரணமடைந்தனர். எனவே கூட்டத்தை கட்டுப்படுத்த, அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.



இதனை தொடர்ந்து எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் என்ற முறையை நேற்று அறிமுகப்படுத்தியது அறநிலையத்துறை. இந்த திட்டத்தின் மூலம் தரிசனம் செய்ய ஆன்லைன் மூலமாக ரூபாய் 300 கொடுத்து செலுத்தி முன்பதிவு செய்து கொண்டு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அத்தி வரதரை தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இந்த நிலையில் முதியவர்கள், உடல் நலம் குன்றியவர்கள், கர்ப்பிணி பெண்கள், பச்சிளம் குழந்தைகள் என யாரும் அத்தி வரதரை தரிசனம் செய்ய காஞ்சிபுரம் வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்  விடுத்து உள்ளார்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்