18 வருடத்தில் இப்போது தான் லீவு போட்டு இருக்கேன்..! பிரதமரின் ஆச்சர்ய பதில்...!

Published : Aug 13, 2019, 06:07 PM IST
18 வருடத்தில் இப்போது தான் லீவு போட்டு இருக்கேன்..! பிரதமரின் ஆச்சர்ய பதில்...!

சுருக்கம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள "ஜிம் கார்பெட்"தேசிய பூங்காவில் இந்த நிகழ்ச்சி எடுக்கப்பட்டது.

கடந்த 18 ஆண்டுகளில் இப்போதுதான் விடுமுறை எடுத்து உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். "மேன் வெர்சஸ் வைல்ட்" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள "ஜிம் கார்பெட்"தேசிய பூங்காவில் இந்த நிகழ்ச்சி எடுக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பேர் கிரல்ஸ் மோடியிடம் பல்வேறுவிதமான கேள்விகளை எழுப்பினார்

அப்போது பேசிய மோடி,"என்னுடைய 18 ஆண்டுகால அரசு பணியில் இப்போதுதான் விடுமுறை எடுத்துள்ளேன். எனக்கு பயம் என்பது சற்றும் கிடையாது.. எந்த ஒரு விஷயத்தையும் சாதகமாகவே நடைபெறும் என எதிர்பார்த்து ஒவ்வொரு அடி எடுத்து வைப்பதால் அதில் வரும் சிறு சிறு சிக்கலையும் தூக்கி எறியும் நிலை எனக்கு உண்டு.

மக்கள் இயற்கை வளத்தை அழிக்காமல் எதிர்கால சந்ததியினருக்கு விட்டு செல்ல வேண்டும்.. 13 ஆண்டுகளாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக தொடர்ந்து இருந்தேன்...பின்னர் பிரதமராக பொறுப்பேற்று ஐந்து ஆண்டு காலம் கடந்து விட்டது... இந்த 18 ஆண்டு கால அரசு பணியில் தற்போது தான் விடுப்பு எடுத்து உள்ளேன். மக்களுக்காக உழைப்பது மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.. இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேறி வெற்றி பெற வேண்டும்" என தெரிவித்து உள்ளார்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மனைவியை மகிழ்ச்சியாக வைக்கும் ரகசியம் இதுதான் - சாணக்கியர் குறிப்புகள்
பணக்காரராக மாற '5' மந்திரங்கள் இவைதான்! சாணக்கியர்