மனைவியின் துரோகத்தை விருந்து வைத்து வீடியோ மூலம் வெளிச்சம் போட்டு காட்டிய கணவர்..!

Published : Feb 13, 2019, 03:01 PM IST
மனைவியின் துரோகத்தை விருந்து வைத்து வீடியோ மூலம் வெளிச்சம்  போட்டு காட்டிய கணவர்..!

சுருக்கம்

மனைவி தனக்கு செய்த துரோகத்தை பெரிய விருந்து வைத்து அனைவரின் முன் வெளிப்படுத்திய கணவனால் அதிர்ச்சியில் மூழ்கினர் உறவினர்கள்.

மனைவியின் துரோகத்தை விருந்து வைத்து வீடியோ மூலம் வெளிச்சம்  போட்டு காட்டிய கணவர்..! 

மனைவி தனக்கு செய்த துரோகத்தை பெரிய விருந்து வைத்து அனைவரின் முன் வெளிப்படுத்திய கணவனால் அதிர்ச்சியில் மூழ்கினர் உறவினர்கள்.

வெனிசுலா நாட்டை சேர்ந்த ஒருவர், தனது  மனைவி வேறு ஒருவருடன் பேசி வருவதை கவனித்து மனமுடைந்த கணவர் ஒரு வித்தியாசமான  முடிவை எடுத்தார். அதன் படி, தன் மனைவி எப்படிப்பட்டவர் என்பதை  அனைவரின் முன்பும் வெளிப்படுத்த திட்டமிட்ட கணவர், தங்களின்  உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரையும் வீட்டிற்கு அழைத்து பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்தார்.

அப்போது அந்த நபர் மைக்கில் பேச ஆரம்பித்தார். அவருக்கு அருகிலேயே அவருடைய மனைவி டலியானா நின்று கொண்டிருந்தார், அப்போது பேச தொடங்கிய  கணவர், "என்னுடைய 20 ஆண்டுகால நண்பனும்,வெனிசுலா ஜனாதிபதி நிகோலாஸ் மதுரோவுக்கு நெருங்கிய ஒருவராகவும் உள்ள அல்பர்ட்டோவும் என் மனைவியும் மெசேஜ் செய்து பேசி வருகின்றனர்.இருவரும் திருமணம் செய்துகொள்ள கூட முடிவு செய்து உள்ளனர். இவர்கள் இருவருக்குள்ளும் ரகசிய உறவு இருந்து வருகிறது என அவர் பேசியபடியே, அந்த அனைத்து மெஸேஜையும் உறவினர்கள் முன் எடுத்து காண்பித்து உள்ளார்.


 இதை கண்டு பதற்றம் அடைந்த அந்த பெண், வேகமாக அந்த  செல்போனை கணவரிடம் இருந்து பறிக்க முயல்கிறார். ஆனால் அவரோ ,அருகில் உள்ள நீச்சல் குளத்தில் அந்த மொபைலை தூக்கி எறிகிறார். இந்த காட்சி அடங்கி வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்