வடமாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை...! வெப்பம் கடுமையாக உயரும்..! இந்திய வானிலை அதிர்ச்சித் தகவல்..!

Published : May 29, 2019, 06:01 PM ISTUpdated : May 29, 2019, 06:02 PM IST
வடமாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை...! வெப்பம் கடுமையாக உயரும்..! இந்திய வானிலை அதிர்ச்சித் தகவல்..!

சுருக்கம்

கோடை வெயில் தாக்கத்தில் இருந்து மீள முடியாத இந்த தருணத்தில் மீண்டும் அதிர்ச்சி தரும் வண்ணமாக டெல்லியில் கடும் வெயில் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

கடுமையான வெயில் எச்சரிக்கை..! உஷார் மக்களே.. இனி தான் பிரச்சனை..! 

கோடை வெயில் தாக்கத்தில் இருந்து மீள முடியாத இந்த தருணத்தில் மீண்டும் அதிர்ச்சி தரும் வண்ணமாக டெல்லியில் கடும் வெயில் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதன்படி அடுத்து வரும் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு அதிகப்படியான வெப்பநிலை பதிவாகும் என்றும்,அதே நேரத்தில் மழைக்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லவே இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

இதுதவிர பஞ்சாப் ராஜஸ்தான் உத்திரபிரதேசம் மாநிலங்களிலும் வெப்பநிலை கடுமையாக உயரும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த மாநிலங்களிலும் மழைக்கான வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 4 ஆம் தேதி தொடங்கிய கத்திரி வெயில் 29ஆம் தேதி தேதியான இன்றுடன் முடியும் தருவாயில் அடுத்துவரும் நாட்களில் வெயில் மெல்ல மெல்ல குறையும் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் இனி தான் அதிக வெயில் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததை அடுத்து மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

பேரிச்சம் பழம் வைத்து செய்த healthy Ferrero Rocher chocolate | No Sugar Chocolate recipe
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!