Holi 2024 : ஹோலி ஏன் கொண்டாடுகிறது..? அதன் சிறப்புகள் என்ன..??

Published : Mar 05, 2024, 04:00 PM ISTUpdated : Mar 05, 2024, 04:01 PM IST
Holi 2024 : ஹோலி ஏன் கொண்டாடுகிறது..? அதன் சிறப்புகள் என்ன..??

சுருக்கம்

ஹோலி பண்டிகையின் சிறப்புகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

வண்ணங்களின் திருவிழா என்று அழைக்கப்படும் ஹோலி, இந்து பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு துடிப்பான மற்றும் மகிழ்ச்சியான கொண்டாட்டமாகும். ஆண்டுதோறும் மாசி மாதத்தின் பெளர்ணமி  நாளில் அனுசரிக்கப்படுவது, தீமையின் மீது நன்மையின் வெற்றி மற்றும் வசந்தத்தின் வருகையைக் குறிக்கிறது. ஹோலிகா தகனத்துடன் விழாக்கள் தொடங்குகின்றன. அடுத்த நாள் மக்கள் வண்ணங்களுடன் விளையாடி, ஒருவரையொருவர் வண்ணங்கள் பூசி, மகிழ்ச்சியான சூழ்நிலையில் மகிழ்வதால் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

2024 ஹோலி எப்போது?
இந்து பஞ்சாங்கத்தின் படி, மாசி மாதத்தின் முழு நிலவு மார்ச் 24 அன்று காலை 9:54 மணிக்கு தொடங்கி மார்ச் 25 அன்று மதியம் 12:29 மணிக்கு முடிவடையும். எனவே, ஹோலிகா தகனம் மார்ச் 24, ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படும். இதற்கான நல்ல நேரம் இரவு 11:13 முதல் 12:27 வரை. இதைதொடர்ந்து, மார்ச் 25ஆம் தேதி திங்கட்கிழமை ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

2024 ஹோலி வரலாறு மற்றும் முக்கியத்துவம்: 
ஹோலி, வண்ணங்களின் திருவிழா, இந்தியாவில் மிகவும் துடிப்பான மற்றும் மகிச்சியான கொண்டாட்டங்களின் ஒன்றாகும். இது பொதுவாக மார்ச் மாதத்தில் வசந்த காலத்தில் கொண்டாடுகிறது. மேலும் இது, "காதலின் திருவிழா" மற்றும் "வண்ணங்களின் திருவிழா" என்று அழைக்கப்படுகிறது. வேற்றுமைகளை மறந்து வாழ்வின் இன்பத்தைக் கொண்டாட மக்கள் ஒன்று கூடும் விழாவாகும்.

இதையும் படிங்க:  ஹோலி பண்டிகையன்று இதையெல்லாம் வீட்டிற்கு வாங்கி வந்தால் நீங்கள் தான் கோடீஸ்வரர்!

ஹோலியின் தோற்றம் பண்டைய இந்து புராணங்களில் இருந்து அறியப்படுகிறது. புராணத்தின்படி, கிருஷ்ணருக்கு சிறுவயதில் கொடுக்கப்பட்ட தாய்ப்பால் விஷமாக மாறியதால், அவரது கன்னம் நீல நிறமாக மாறியது. இதனால் அவர் வருத்தமடைந்தார். அதுமட்டுமின்றி, ராதை மற்றும் இதர பெண்கள் விரும்பமாட்டார்கள் என்று கிருஷ்ணர் நினைத்து வருந்தினார். கிருஷ்ணரின் வருத்தத்தைக் கண்ட அவரது யாசோதா, ராதையின் முகத்திலும் வண்ணங்கள் பூசினார். இப்படிதான், கிருஷ்ணர் மற்றும் ராதையின் புனித காதலை பிரதிபலிக்கும் விதமாக தான் "ஹோலி" பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

இதையும் படிங்க:  இயற்கையான முறையில் ஹோலி நிறங்களை அகற்ற 5 வழிகள்..!!

வண்ணங்கள் மற்றும் முக்கியத்துவம்: 
சிவப்பு காதல் மற்றும் கருவுறுதலைக் குறிக்கிறது. அதே நேரத்தில் பச்சை என்பது புதிய தொடக்கங்களையும் வளர்ச்சியையும் குறிக்கிறது. ஆரஞ்சு புதிய தொடக்கம் மற்றும் மன்னிப்பின் அவசியத்தை உணர்த்துகிறது. மஞ்சள் மகிழ்ச்சி, அமைதி, கொண்டாட்டம், தியானம், அறிவு மற்றும் கற்றல் ஆகியவற்றை குறிக்கிறது. கனிவு கருணை மற்றும் நல்லொழுக்கத்தைக் பிரதிபலிக்கிறது. நீல நிறம் பிற நிறங்களை விட சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மற்றும் இது கிருஷ்ணரின் நிறத்தை குறிப்பதாகவும் வலிமை மற்றும் ஆன்மீக வளர்ச்சியை உணர்த்துவதாகவும் குறிக்கிறது. வண்ணங்கள் மக்களின் வெவ்வேறு உணர்ச்சிகளையும், மனநிலையையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக நம்பப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்