பெற்றோர்களை திட்டினால், பிள்ளைகளை வீட்டை விட்டு துரத்தலாம் – உயர்நீதிமன்றம் அதிரடி

 
Published : Mar 21, 2017, 10:11 AM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
பெற்றோர்களை திட்டினால், பிள்ளைகளை வீட்டை விட்டு துரத்தலாம் – உயர்நீதிமன்றம் அதிரடி

சுருக்கம்

high court orders parents about children

பெற்றோர்களை தரக்குறைவாக பேசும் பிள்ளைகளாக நீங்கள்..? அப்படியென்றால்  விரைவில் வீட்டை  வெளியேற்றப்படுவீர்.  பெற்றோர்களுக்கு ஈடு இணையாக இந்த உலகில் வேறு எதுவும் பெரிது கிடையாது. ஆனால்  தற்போது உள்ள காலக்கட்டத்தில்,  வீட்டில் உள்ள  வயதான  ஓய்வு  பெற்ற பெற்றோர்களை  பாரமாக நினைக்கும் பிள்ளைகள் அதிகரித்து உள்ளனர் .

அதுமட்டுமில்லாமல், வயதான பெற்றோர்களை வார்த்தைகளால் கொள்வதும் உண்டு, தரக்குறைவாக  பேசி அவர்கள் மனம் புண்படும் படி செய்வதுண்டு. இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக, இவ்வாறு தரக்குறைவாக பெற்றோர்களிடம் நடந்துக் கொள்ளும் பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியேற செய்யும் அதிகாரம் பெற்றோர்களுக்கு உண்டு என டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது .

மதுக்கடைமையான முன்னாள் காவல்துறை அதிகாரி மற்றும் அவரது சகோதரர் சார்பில் வயதான,தங்கள் பெற்றோர்களை வீட்டை விட்டு வெளியேற்றுவது தொடர்பாக, பெற்றோர்கள் பராமரிப்பு  தீர்ப்பாயம் சில கருத்தை முன் வைத்து, பெற்றோர்களை வீட்டை விட்டு வெளியேற்ற கூடாது என தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, இரண்டு சகோதரர்களும் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவிற்கு தான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது  பெற்றோர்களை பாரமாக நினைத்து , தரக்குறைவாக  நடந்துக் கொள்ளும் பிள்ளைகளை  வீட்டை விட்டு வெளியேற செய்யும் அதிகாரம்  பெற்றோர்களுக்கு உண்டு என டில்லி  உயர்நீதிமன்றம்  தெரிவித்துள்ளது .

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்