பயங்கர மழை வராதாம்..! சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்லிடுச்சு..!

Published : Aug 02, 2019, 04:31 PM IST
பயங்கர மழை வராதாம்..! சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்லிடுச்சு..!

சுருக்கம்

கடலோர பகுதிகளில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பயங்கர மழை வராதாம்..! சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்லிடுச்சு..! 

கடலோர பகுதிகளில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழக கடலோரப் பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், குறிப்பாக காஞ்சிபுரம், விழுப்புரம்,சென்னை, திருவள்ளூர் கடலூர், உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுவையிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் தற்போது உள்ளவாறே, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் பொறுத்தவரையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்பது கூடுதல் தகவல். கோடைக்காலம் முடிந்து தற்போது மழை சீசன் என்பதால் அவ்வப்போது பெய்து வரும் லேசான மழை மக்களை மகிழ்ச்சி அடைய செய்கிறது.சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து ஓரளவிற்கு தாக்குப்பிடித்து தற்போதைய மிதமான கிளைமேட்டை என்ஜாய் செய்து வருகின்றனர் மக்கள்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Summer Flowers: கடவுளுக்குப் பூக்கள்.! வீடு முழுவதும் வாசம்.! கோடையில் பால்கனியில் வளர்க்க ஏதுவான 6 செடிகள்.!
Miss India 2026: வெறும் 3 மாத பயிற்சி... உலக அழகி போட்டிக்கு தகுதி.. யார் இந்த சாத்வி செய்ல்? மிஸ் இந்தியா சீக்ரெட் கதை!