இடி மின்னலுடன மழைக்கான வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன..?

Published : Sep 13, 2019, 02:03 PM IST
இடி மின்னலுடன மழைக்கான வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன..?

சுருக்கம்

கடந்த 24 மணி நேரத்தில் பொருத்தவரையில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இடி மின்னலுடன மழைக்கான வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன..?  

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மேலும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மதுரை தஞ்சாவூர் பெரம்பலூர் கடலூர் திருவாரூர் விழுப்புரம் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மட்டும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பொருத்தவரையில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியசும் இன்று பதிவாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த 5 செடிகளை வீட்டில் வளர்த்தால் பல்லி தொல்லை இனி இல்லை!
Summer Bright Lipstick:கோடை காலத்தை கலர்ஃபுல்லாக மாற்றும் 6 பிரைட் லிப்ஸ்டிக் ஷேடுகள்!