மீண்டும் புதிய உச்சம் அடைந்த தங்கம் விலை..! தவிக்கும் மக்கள்..!

thenmozhi g   | Asianet News
Published : Jan 04, 2020, 12:07 PM IST
மீண்டும் புதிய உச்சம் அடைந்த தங்கம் விலை..! தவிக்கும் மக்கள்..!

சுருக்கம்

மீண்டும் இன்றும் தங்கம் விலை உயர்வை கண்டு உள்ளது. அதன் படி, ஒரு  கிராம் ரூ.17 உயர்ந்து 3832.00 ரூபாயாகவும், சவரனுக்கு 136 உயர்ந்து 30 ஆயிரத்து 656 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

மீண்டும் புதிய உச்சம் அடைந்த தங்கம் விலை..! தவிக்கும் மக்கள்..! 

புத்தாண்டு பிறந்தவுடன் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று  ஒரே நாளில் சவரனுக்கு ரூ.632 உயர்ந்து 30 ஆயிரத்து 520 க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்றும் மீண்டும் தங்கம் விலை உயர்வை கண்டு உள்ளது  

உலகம் முழுவதுமே இருக்கக்கூடிய மந்தமான சூழ்நிலை, குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல் (ஈராக் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் ) மேலும் மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதே திடீர் விலை உயர்வதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..! 

இந்த நிலையில் மீண்டும் இன்றும் தங்கம் விலை உயர்வை கண்டு உள்ளது. அதன் படி, ஒரு  கிராம் ரூ.17 உயர்ந்து 3832.00 ரூபாயாகவும், சவரனுக்கு 136 உயர்ந்து 30 ஆயிரத்து 656 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 40 பைசா குறைந்து 51 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Liver Side Effects : கோழி, ஆட்டு ஈரல் ரொம்ப ருசிதான் - இவங்க தவிர்க்கனும்?
பாம்புகளை வரவிடாமல் தடுக்க சிறந்த வழிகள்