தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.
மாலை நேரத்தில் மளமளவென உயர்ந்த தங்கம் விலை ..!
தங்கத்தின் மீதான விலை ஏற்ற இறக்கத்துடன் தொடர்ந்து காணப்பட்டு வந்தாலும் சவரன் விலை 29 ஆயிரத்திலிருந்து குறைந்தபாடில்லை. இந்த நிலையில் சவரனுக்கு ரூ.128 ரூபாய் உயர்ந்து உள்ளது.
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்த சவரன் விலை தற்போது 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது.
இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 31 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 16 ரூபாய் அதிகரித்து 3634 ரூபாயாகவும், சவரனுக்கு 128 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 72 ரூபாய்க்கு விற்கப்படுகிறது
மாலை நேர நிலவரப்படி,
கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 3644 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 152 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதாவது இன்று ஒரே நாளில் சவரனுக்கு 208 ரூபாய் உயர்ந்து உள்ளது
வெள்ளி விலை நிலவரம்
கிராமுக்கு 128 பைசா அதிகரித்து வெள்ளி 48.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.