
மீண்டும் சரசரவென உயர்ந்த தங்கம் விலை...!
கடந்த 3 நாட்களாகவே தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது.கடந்த இரண்டு மாத காலத்தில் குறிப்பாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்த உடன் சவரன் 30 ஆயிரத்தை தாண்டி சவரன் விலை இருந்தது. பின்னர் மீண்டும் படிப்படியாக குறைந்து சவரன் விலை 28 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. இந்த நிலையில் மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. தீபாவளிக்கு நெருங்க உள்ள தருணத்தில் நாளுக்கு நாள் சவரன் விலை அதிகரிக்க கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்
காலை நேர நிலவரப்படி,
கிராமுக்கு ரூ.17 அதிகரித்து, சவரனுக்கு ரூ.184 குறைந்தும், சவரன் ரூ.29 ஆயிரத்து 264 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி விலை நிலவரம்
ஒரு கிராம் வெள்ளி 80 பைசா அதிகரித்து, 49.80 ரூபாய்க்கு விற்பனையாகிறது
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.