மீண்டும் திடீரென உயர்ந்தது தங்கம் விலை..!

Published : Oct 19, 2019, 12:42 PM IST
மீண்டும் திடீரென உயர்ந்தது தங்கம் விலை..!

சுருக்கம்

செய்கூலி சேதாரம் என சேர்த்து 31 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் திடீரென உயர்ந்தது தங்கம் விலை..! 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சில நேரங்களில் உயர்ந்தும் சில நேரங்களில் விலை குறைந்தும் விற்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் சவரன் விலை மீண்டும் 30 ஆயிரத்தை நெருங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. 

அதற்கு முக்கிய காரணமாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில்இருந்து 12.5 சதவீதமாக அதிகரித்த பிறகு தங்கம் விலையும் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. அதன் விளைவாக 27 ஆயிரம் ரூபாய் இருந்த சவரன் விலை 30 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. பின்னர் மீண்டும் சற்று குறைந்து 29 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் மீண்டும் சவரன் விலை மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கி தற்போது 29 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.

இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 31 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து 3666 ரூபாயாகவும், சவரனுக்கு 72 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 328 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.11 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.88 குறைந்து, 29 ஆயிரத்து 256 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம் 

ஒரு கிராம் வெள்ளி 20 பைசா அதிகரித்து  49.20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Star Fruit Benefits : இந்த ஸ்டார் பழத்தை பாத்தா உடனே வாங்கி சாப்பிடுங்க... கோடி நன்மைகள் கிடைக்கும்
Weight Loss Breakfast Ideas : கடினமான உடற்பயிற்சி இல்லாமலே 'எடையை' குறைக்கும் காலை உணவுகள்!