மாலை நேரத்தில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை...!

By ezhil mozhiFirst Published Oct 14, 2019, 3:30 PM IST
Highlights

சென்ற மாதம் தங்கம் விலை சவரனுக்கு 30 ஆயிரத்தை கடந்து விற்பனை ஆனது. பின்னர் மீண்டும் சரியத் தொடங்கிய தங்கம் விலை இடையே இடையே அவ்வப்போது குறைந்து விற்பனையாகிறது.
 

மாலை நேரத்தில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை...! 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏறுமுகமாகவும்  சில சமயங்களில் விலை சரிந்து காணப்பட்டு வருகிறது.சென்ற மாதம் தங்கம் விலை சவரனுக்கு 30 ஆயிரத்தை கடந்து விற்பனை ஆனது. பின்னர் மீண்டும் சரியத் தொடங்கிய தங்கம் விலை இடையே இடையே அவ்வப்போது குறைந்து விற்பனையாகிறது.

இதன் காரணமாக பொதுமக்கள் தங்கம் வாங்க இது சரியான தருணமா? இல்லையா? என்ற குழப்பத்தில் இருந்து வந்தனர்.இந்த நிலையில் தீபாவளி நெருங்குவதால் தங்கம் விலை மெல்ல மெல்ல அதிகரித்து 30 ஆயிரத்தை நெருங்கும் வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்த ஒரு தருணத்தில் இன்று சவரன் விலை குறைந்து உள்ளது. அதாவது வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று, காலை நேர நிலவரப்படி...

கிராமுக்கு 4 ரூபாய் குறைந்தும், சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து120 ரூபாய்க்கு விற்கப்டுகிறது.

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, சவரனுக்கு 160 உயர்ந்தும், 29 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம்.. 

கிராம் 49.10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.  

click me!