காலை நேரத்தில் மகிழ்ச்சியான செய்தி..! சவரன் விலை சட்டென குறைவு..!

By ezhil mozhiFirst Published Jan 9, 2020, 12:19 PM IST
Highlights

உலகம் முழுவதுமே இருக்கக்கூடிய மந்தமான சூழ்நிலை, குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல் (ஈராக் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் ), போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதே திடீர் விலை உயர்வதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை நேரத்தில் மகிழ்ச்சியான செய்தி..! சவரன் விலை சட்டென குறைவு..! 

புத்தாண்டு பிறந்தவுடன் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து சவரன் ரூபாய் 31 ஆயிரத்தை தாண்டியாது. இந்த  நிலையில்  இன்றைய காலை நேர  நிலவரப்படி, கிராமுக்கு ரூ.67 குறைந்து 3830 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

உலகம் முழுவதுமே இருக்கக்கூடிய மந்தமான சூழ்நிலை, குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல் (ஈராக் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் ), போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதே திடீர் விலை உயர்வதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கிராமுக்கு ரூ.67 குறைந்து 3830.00 ரூபாயாகவும், சவரனுக்கு 536  ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 640  ரூபாய்க்கும் விற்கப்படுகிறது

வெள்ளி விலை நிலவரம் 

ஒரு கிராம் வெள்ளி 1.10 ரூபாய் குறைந்து 51.00 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

click me!