சில நாட்களுக்கு பிறகு மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்து இருக்கிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் எதிரொலியாக வங்கி வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்துள்ளன. இதனால் அந்நாடுகளின் முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் தங்கத்தை வாங்கி வருகின்றன. இந்த நிலையில் தங்கத்தின் விலை சில நாட்களுக்கு பிறகு இன்று உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு கிட்டத்தட்ட ரூ.48 ரூபாய் உயர்ந்து, ரூ. 35,784 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஒரு கிராம் தங்கம் ரூ.6 உயர்ந்து குறைந்து, ரூ.4,473 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 30 பைசா உயர்ந்து ரூ 65.30-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூபாய் 300 உயர்ந்து, ரூ. 65,300 ஆக உள்ளது.