மாணவர்கள் இப்போதே தேர்வுக்கு தயாராகலாம்..! வெளியானது தேர்வு அட்டவணை..!

Published : Jul 19, 2019, 03:31 PM IST
மாணவர்கள் இப்போதே தேர்வுக்கு தயாராகலாம்..! வெளியானது தேர்வு அட்டவணை..!

சுருக்கம்

10, 11, 12ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டு உள்ளது. அதன் படி மும்மொழி கொள்கை மற்றும் புதிய பாடத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தேர்வு அட்டவணையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

10, 11, 12ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டு உள்ளது. அதன் படி மும்மொழி கொள்கை மற்றும் புதிய பாடத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தேர்வு அட்டவணையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள தேர்வு அட்டவணை படி, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 2-ஆம் தேதி தேர்வு தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் 24ம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் மே மாதம் 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்போன்று பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 17-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், தேர்வு முடிவுகள் மே மாதம் நான்காம் தேதி வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே  மாணவர்கள் இப்போதிலிருந்தே தேர்வுக்கு தயாராகலாம். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்