
கடந்த 2015ல் நடந்த விபத்தில், ஜி என்பவர் தனது காதை இழந்துள்ளார்.இந்த சம்பவம் நடந்த இடம் சீனாவின் சியான் நகரத்தில் என்பது குறிப்பிடத்தக்கது .
இதனை தொடர்ந்து அவருக்கு எப்படியாவது காது பொறுத்த வேண்டும் என முடிவு செய்த சீன மருத்துவர்கள் , இதற்காக , அவருடைய கையில் செயற்கையான முறையில் ஒரு காதை வளர்த்து , அதை அவருக்கு பொருத்தி , தற்போது அவருக்கு அருமையாக காது கேட்கிறதாம் .
எப்படி சாத்தியம் ?
விலா குருத்தெலும்பை காது போல் வடிவமைத்து 3 – டி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, அவரது கையில் காதை வளர்த்து வந்தனர் .கிட்டத்தட் 4 மாதங்களாக செயற்கையான முறையில் வளர்க்கப் பட்ட அந்த காது, ஒரு கட்டத்தில் நல்ல உணர்வுடன் செயல்பட்டதை தொடர்ந்து, அவர் கையிலிருந்து அந்த காதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி பின்னர் , காது இருக்குமிடத்தில் 7 மணி நேரம் சவாலாக போராடி பொருத்தியுள்ளனர் சீன டாக்டர்கள். தற்போது அந்த ஜி என்கிற நபர் நல்ல ஆரோக்கியமான முறையில், காது கேட்பதை உணர முடிகிறது என தெரிவித்துள்ளார்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.