யூனிபார்மில்..மக்கள் காலை தொட்டு தொட்டு கும்பிடும் டி.எஸ்.பி ..! வெளிவந்த பகீர் வீடியோ...!

By ezhil mozhiFirst Published Jan 4, 2020, 5:35 PM IST
Highlights

பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கு ஒத்துழைக்க கூடாது என கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர் விவசாயிகள். 

யூனிபார்மில்..மக்கள் காலை தொட்டு தொட்டு கும்பிடும் டி.எஸ்.பி ..!  வெளிவந்த பகீர் வீடியோ...! 

ஆந்திராவில் அமராவதியை தலைநகராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து நடத்திய போராட்டத்தில் பெண்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

அப்போது போலீசார் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கு ஒத்துழைக்க கூடாது என கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர் விவசாயிகள். மேலும் பாதுகாப்பு பணியில் உள்ள பொலிஸாருக்கு  குடிக்க தண்ணீர் கூட கொடுக்க கூடாது என கிராம மக்கள் முடிவு  செய்தனர். 

இந்த நிலையில் நிலைமைசற்று மோசமானதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டங்களை கட்டுப்படுத்த பொதுமக்களிடம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறி காவல்துறை அதிகாரி டி.எஸ்.பி தான் சீருடை அணிந்து இருப்பதையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் கால்களை தொட்டு வணங்கி போராட்டத்தை கைவிடுமாறு கேட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

Protesters fell at feet of Deputy Superintendent of Police(DSP) Veera Reddy, who in turn fell at the feet of protesters in Mandadam in Amravati district. Farmers have been protesting for more than three weeks against the state govt's three capitals proposal. pic.twitter.com/hAvhXtWZ8t

— ANI (@ANI)

இந்த தருணத்தில் மக்களும் நிலைமையை சமாளிக்க ஏன் சார் இப்படிபண்றீங்க என விலகி விலகி செல்லும் வீடியோ காட்சி வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!