இன்று மாலை 6 முதல் 7 மணிக்குள் "ஒரு பிடி உப்பு" மறக்காம வாங்குங்க..!

First Published Apr 18, 2018, 12:23 PM IST
Highlights
dont forget to buy salt today


அக்ஷய திருதியான இன்று சில விஷயங்களை நாம் செய்தால் கண்டிப்பாக வாழ்வில் நாம் மேலும் உயர்வடைய வாய்ப்புகள் உண்டு.

அக்ஷய திருதியன்று பொதுவாகவே தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்களை வாங்கி குவிப்பார்.

இன்றைய தினத்தில், நகை கடைகளில் கூட்டம் அலை மோதும்.இது ஒரு பிசினஸ் ரீதியாகவும் மார்கெட் நடக்கிறது.

உப்பு

இன்றைய தினத்தில் இன்று காலை 6  மணி முதல் 7 மணிக்குள் அல்லது  மாலை 6  மணி முதல் 7 மணிக்குள் உப்பை வாங்குங்கள்..

உப்பு ஜாடியில் 11 ரூபாய் காயின்ஸ்...

அக்ஷய திருதியான இன்று மாலை 6 மணி முதல் 7 மணி குள் உப்பு வாங்கி, அதனை  நம் வீட்டில் உள்ள உப்பு ஜாடியில் வைத்து, அதால் 11 ரூபாய்  வரை நாணயங்களை போட்டு வைக்க வேண்டும்.

பெருமாள் கோவிலுக்கு செல்லும் போது ...

பெருமாள் கோவிலுக்கு சென்று, நீங்க உப்பு ஜாடியில் வைத்து இருந்த அந்த 11 ரூபாயை கடவுளிடம் வேண்டிக்கொண்டு உண்டியில் செலுத்துங்கள்

அப்போது மேன்மேலும் செல்வம் பெருக வேண்டும் என  வேண்டிக்கொண்டு  உண்டியில் செலுத்துங்கள்...அடுத்து வரும்  நாட்களில்  செல்வம் நம்மை வந்து  அடையும்....மென்மேலும் வாழ்க்கை உயரும்.

அக்ஷய திருதியான இன்று தங்கம் வாங்குவதை விட உப்பு வாங்குவது ஆக சிறந்தது. மேலும்  உப்பு  என்பது லக்ஷ்மியை குறிக்கும்.இன்றைய நாளில் அந்த  லக்ஷ்மியே நம்  வீட்டிற்கு வந்து குடி புகுவாள் என்பதி ஐதீகம்.

click me!